பால் , எறும்பு
இரண்டுக்குமான பாதுகாப்பாய்
லஷ்மண்ரேகா, மஞ்சள்தூள்
எல்லாவற்றாலும்
எவ்வளவுதான்
பாதுகாப்பு வளையம்
போட்டு வைத்தாலும்
வியூகங்களையெல்லாம்
தகர்த்து எரிந்து விட்டு
வேலி தாண்டி
பால்(ழ்) கிணற்றில்
பாய்ந்து
தற்கொலை செய்து கொள்கின்ற
எறும்புகளுக்காக
தினமும் நடத்துகிறேன்
இரங்கல் கூட்டத்தை...
உழைப்பை,
விடா முயற்சியை,
சுறுசுறுப்பை
போதித்த
எறும்புகளிலும்
கோழைகள் உண்டென..!