ஆதிரா பக்கங்கள்
Wednesday, September 25, 2013
அலமாரி பொம்மைகள்
விழிகளில்
ஏக்கப் பூக்களை ஏந்தி
முதியோர் இல்லங்களில்
காத்திருக்கும்
பெற்றோர்களைப் போல…
ஏக்கத்துடன்
வெறித்துப்
பார்த்துக் கொண்டே
இருக்கின்றன..
வளர்ந்த குழந்தைகளின்
ஸ்பரிசத்திற்காக
அலமாரியில்
ஒதுக்கப் பட்ட
அவர்கள் விளையாடிய
பொம்மைகள்
Saturday, September 21, 2013
குழந்தைகளின் உலகில்
தன்னைத் தானே
கோபித்துக் கொண்டன
கொஞ்சலும் கோபமும்
காமமில்லாத
தழுவல்களும்
மோகமில்லாத
முத்தங்களும்
நிறைந்த
குழந்தைகளின் உலகில்
பொம்மையாகாது
கயவர்களின்
உலகில்
கடவுளாகிப் போனதை
எண்ணிய
சிலைகள்
Sunday, September 15, 2013
முத்தச் சந்தம்
வானம்
இதழ் குவித்து
மழைத் துளியால்
மண் காதலியை
முத்தமிடும்
சந்தத்தில்...
உயிர்ப்பது...
மரங்களின்
சந்ததிகள் மட்டுமல்ல
மக்களின் சந்ததிகளும்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)