Showing posts with label வாழ்த்துப்பா. Show all posts
Showing posts with label வாழ்த்துப்பா. Show all posts

Thursday, August 30, 2012

பிரிவுரையும்... வாழ்த்தும்....



என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்....


நினைக்கின்ற பொழுதெல்லாம் கவிதையாகி
நீபாடு என ஊறும் தமிழ் ஊற்று
கணக்கின்ற இதயத்துடன் தேடுகின்றேன் - பிரிவுரை
கவிதைக்கோ ஓர் சொல்ல்லும் கிடைக்கவில்லை

உற்றதொரு ஆலமரக் கிளைகளிலே வாழ்கின்ற
உல்லாசப் பறவைகளே உம்பிரிவால்
இரவினிலே முழுநிலவை மூடிவைத்த மைஇருளில்
கண்ணிருந்தும் தள்ளாடிக் கரைந்திட்டேன் இந்நாளில்
என்றாலும்
வாழ்த்தொன்று கூறிடவும் விழைந்திட்டேன்

கல்வியெனும் அழியாத செல்வம் பெற்று
காதலினால் வைத்தைக் கட்டிப் போட்டு
இணையற்ற பொருள்செல்வம் பெரிதும் பெற்று
இன்பத்தை இடையறாது என்றும் பெற்று
இசைநாட்டி வாழ்ந்திடுவீர் என்றும் என்றும்

உழைப்பினிலே ஓயாத கதிரவன் போல்
ஊக்கத்தில் இமயத்தின் அடிமலை போல்
இமைக்காமல் முன்னேறிச் சென்று நாளை
ஈட்டிடுவீர் வெற்றிஎட்டு திக்கும் திக்கும்


கடமைதனை மறவாது செய்வார்க் கெல்லாம்
காலமகள் வெற்றி தந்து வாழ்த்தும் இசைப்பாள்
உடைமைதனை பிறர்க்கீந்து மகிழ்ச்சி கொண்டால்
உண்டாகும் பெரும்பேறு சிறுமை இல்லை

தடைகண்டு துவளாது முனைந்து செல்வீர்
வரலாறு உமபெயர்க் கும்இடம் கொடுக்கும்
போற்று கின்ற புத்துலக சிற்பியாகி
பொறித்திடுவீர் பொன்னெ ழுத்தால் உம்புகழை

இமைகாக்கும் கண்போல இல்ல றத்தை
இருவருமே போற்றி வாழ்ந்து இன்பம் காண்பீர்
பெற்றவரும் மற்றவரும் வியந்து போற்ற
நற்றமிழ் போல் பெருவாழ்வு வாழ்ந்திடுவீர்

என்றென்றும் என்று நற்றமிழில் நாவைசைத்தேன்
விரும்புகின்ற வாழ்த்தொன்று உளமாற இசைத்திட்டேன்
உளக்குளத்து உதித்தெழுந்து இமைச்சிப்பி பிரசவித்த
விழிமுத்து மாலையிட்டு விரும்பாமல் விடையளித்தேன்!!

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை