Sunday, April 15, 2012

ஒரு தாயின் ஜனனம்



http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSa7pY9EtKfPrHLUPZbep0iaFJDxxpMUGWmkSbFASGIQGVv8WbP
உன் சுவாசத்தில்
பிரித்தெடுத்தெடுத்தேன்
தொலை தூரத்தில் இருந்தும்
உன் மனத்தின்
ஏக்கங்களை

உனக்கே புரியாமல்
உன்னுள்
ஓலமிட்டுக்கொண்டிருப்பது
தாய்மைக்கான ஏக்கமா
காதலுக்கான தவிப்பா
நட்புக்கான துடிப்பா
என்பதை
இனம் காண முடிந்தது
என்னால்

ரகசியமாக
உன்னை
குழந்தையாக்கி
என் மனத்துள்
பூட்டிக் கொண்டு
நாட்கள் பல ஆயிற்று

உன் மனமே புரியாத உனக்கு
என் மனம் எப்படி புரிந்தது?
நான் ரகசியமாக இருக்கவே
விரும்புகிறேன் என்கிறாயே.

என்னை 
தாயாகத் தத்தெடுத்த 
என் பிள்ளை நிலாவே
சுமக்காத என் கருவறையும்
சுருதியாகி இசைக்கும்
சுகமான தாய்ராகம்
உன் பயணத்தில
என் 
வாழ்வின் எல்லை வரை!

11 comments:

  1. ம்ம்ம்
    உணர்வுபூர்வமான வரிகள்
    வாசிக்கையில் ம்ம்ம் வார்த்தைகள் இல்லை

    ReplyDelete
  2. ம்ம்ம்ம் வாருங்கள் செய்தாலி. நீண்ட நாட்கள் கழித்து உங்களைச் சந்திக்கிறேன்.(எழுத்தில்) நலமாக உள்ளீர்களா?

    உடனடியாக வந்து கருத்துக் கூறியமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. தலைப்பே கவிதையாய் ... பல செய்திகளை சொல்கிறது.

    \\உன் பயணத்தில் என் வாழ்வின் எல்லை-///
    அருமையான வரிகள்.

    இந்தக் கவிதை சம்பந்தப்பட்ட அந்த இருவருக்கும் நமக்குப் புரியாத பல உணர்வுகளைச் சொல்லும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சிவா. புரியாத புதிர்தான் மனம்.

      Delete
  4. நலமா ஆதிரா மேடம்?
    நினைவிருக்கிறதா என்னை ?

    ReplyDelete
    Replies
    1. என்ன சிவா இப்படி கேட்டு விட்டீர்கள்? நான் என்னை மறந்தால் உங்களையெல்லாம் மறக்கலாம். வலைப்பூக்களின் பக்கமெல்லாம் வந்து நெடு நாட்கள் ஆயிற்று. பணிச்சுமை. மன்னிக்கவும். வருகிறேன்.

      Delete
  5. என்னை
    தாயாகத் தத்தெடுத்த
    என் பிள்ளை நிலாவே

    நிலவாய் முகம் காட்டி மகிழவைத்த வரிகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி

      Delete
  6. நானும் அடிக்கடி வலைப்பக்கம் வருவதில்லை. அதனால் தான் அந்தக் கேள்வி. மன்னிக்கவும்

    ReplyDelete
  7. நானும் அடிக்கடி வலைப்பக்கம் வருவதில்லை. அதனால் தான் அந்தக் கேள்வி. மன்னிக்கவும்

    ReplyDelete
  8. அக்கறையாகக் கேட்டதற்கு ஏன் மன்னிப்பெல்லாம். மகிழ்ச்சிதான். மீண்டும் கலந்து மகிழும் காலம் வரும். காத்திருப்போம் அதுவரை.

    ReplyDelete