Saturday, June 23, 2012

தாய்


காரை மண் சிமெண்ட் அடிக்கல் இன்றி
கால்கள் இரண்டில்
கருவறை சுமந்து
காதல் குழந்தையை
கடவுளாக்கி
ஒன்பது மாதம்
உதிர நெய்யும்
உயிர்மலர்ப்பூவும்
உணர்வுடன் பெய்து
வேள்வி நடத்தும்
ஒப்புயர்வில்லா
ஒருதனி பக்தை

தாய் 

10 comments:

  1. அருமையான கவிதை சகோ.!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வரலாற்றுச் சுவடுகள்

      Delete
  2. //உதிர நெய்யும்//

    ஆதிரா,

    உயிர் வருடும் எளிமையான சொல்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சத்ரியன்.

      Delete
  3. சொல்லலில் -புதுமை கையாடல்
    கவிதை -தாய்மை

    அழகு

    ReplyDelete
    Replies
    1. நன்றி செய்தாலி அவர்களே.

      Delete
  4. அருமையான படைப்பு

    ReplyDelete