Tuesday, November 13, 2012

நினைவுகளைச் சாப்பிட்டுக் கொண்டு!


சாப்பிட்டாயா 
என்று கேட்க ஆள் இல்லாத போது 
நன்றாகச் சாப்பிட்டேன்
மூன்று வேளையும்!

சாப்பிட்டாயா 
என்று நீ கேட்கும்போதெல்லாம்
சாப்பிட்டேன்
என்று 
பொய் சொல்கிறேன்!

உலர்ந்த வயிற்றோடு
மூன்று வேளையும்
உன் நினைவுகளைச்
சாப்பிட்டுக் கொண்டு!

1 comment:

  1. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete