Saturday, June 29, 2013

பல்கலைக் கழக மானியக் குழுவின் துணைத்தலைர் டாக்டர். தேவராஜன் அவர்களுக்குப் பாராட்டு விழா

இன்று மனத்திற்கு நிறைவான நாள். சென்னைப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர். டாக்டர். தேவராஜன் அவர்கள் பல்கலைக் கழக மானியக்குழுவின் துணைத்தலைவராக பொறுப்பேற்றுள்ளார். தென்னகத்தில் இருந்து பல்கலைக் கழக மானியக் குழுவில் உயரிய பொறுப்பேற்றிருப்பது ஒரு சிறப்பு. தமிழகத்தில் இருந்து பொறுப்பேற்று இருக்கும் முதல் பேராசிரியர் என்னும் பெருமையும் இவர்க்கே.

சென்னை விருந்தினர் கழகத்தின் சார்பில் அவருக்குப் பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தார் அதன் தலைவர் திரு. ரூஸ்வெல்ட் அவர்கள். அவ்விழாவில் பேரா. தேவராஜ்சன் அவர்களைப் பாராட்டிப் பேச சென்னைப் பல்கலையின் முன்னைத் தமிழ்ப்பேராசிரியர் மா. சே. வருகை புரிந்திருந்தார். நானும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேராசிரியரை வாழ்த்தும் பேறு பெற்றேன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. 

தமிழகக் கல்லூரிகளுக்கும் முக்கியமாகச் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கும் என்னால் முடிந்த உதவியைச் செய்வேன் டாக்டர் தேவராஜன்  என்று ஏற்புரையில் கூறியது மகிழ்ச்சியாக இருந்தது.





5 comments:

  1. தேவராஜன் அய்யா அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவியாழி கண்ணதாசன்

      Delete