Saturday, September 21, 2013

குழந்தைகளின் உலகில்

தன்னைத் தானே
கோபித்துக் கொண்டன

கொஞ்சலும் கோபமும்

காமமில்லாத 
தழுவல்களும்
மோகமில்லாத 
முத்தங்களும்
நிறைந்த

குழந்தைகளின் உலகில்

பொம்மையாகாது

கயவர்களின் 

உலகில்
கடவுளாகிப் போனதை
எண்ணிய

சிலைகள்

8 comments:

  1. அருமை...

    தொடர வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார்.

      Delete

  2. ஒரு சிறு மாற்றம் சொல்லத் தோன்றுகிறது.” கயவர்களின் உலகில் “ என்பதற்குப் பதில் “மடையர்களின் உலகில்” என்றிருந்தால்........ பலரும் அடிக்க வருவார்களோ.?

    ReplyDelete
    Replies
    1. G.M.B. சார் மாற்றம் நல்லா இருக்கு. யார் அடிக்க வருவார்கள். கவிதை கவிஞனின் உரிமை.

      கருவறை
      சிறையில்
      கல்லாகிப்
      போன
      கடவுள்

      நான் முதலில் இப்படித்தான் எழுதினேன்.

      Delete
  3. சிறந்த சிந்தனை! அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ் அவர்களே

      Delete
  4. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. முதல் முறையாக வந்துள்ளீர்கள். தங்கள் வருகை நல்வரவாகுக.

      நன்றிகள் விக்னேசுவரி

      Delete