Monday, June 30, 2014

அப்போது ‘அழகு’




ஆதி நாட்களைப் போல் இல்லை
இப்போது எதுவுமே

அப்போது காடு நிரம்பியிருந்தது
இப்போது கட்டிடம்

அப்போது காற்று நிறைந்திருந்தது
நிலமெல்லாம்
இப்போது புகை மண்டலம்

அப்போது ஆன்மிகம் நிறைந்திருந்தது
இப்போது அரசியல்

அப்போது ஆடை மறைத்திருந்தது
அங்கங்களை
இப்போது மேல்நாட்டு வாடை

அப்போது காதல் நிரம்பியிருந்தது
நெஞ்சங்களில்
இப்போது காமம்

ஒற்றைச் சொல்லால் சொல்வதென்றால்
அப்போது ‘அழகு’
இப்போது
நரகு
----------


5 comments:

  1. சிறந்த ஒப்பீடு
    சிறந்த வெளிப்பாடு
    சிறந்த கவிதை!

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஜீவலிங்கம் அவர்களே

    ReplyDelete
  3. Replies
    1. ஆமாம். மனம் மெய் மொழி எல்லாம் அழுக்கு..

      Delete
    2. ஆமாம். மனம் மெய் மொழி எல்லாம் அழுக்கு..

      Delete