Saturday, October 24, 2015

கவிதைகளால்தான் முடியும்



உறக்கத் தேவதையால்
ஆசிர்வதிக்கப் படாதது
பலரின் இரவுகள்
அவளின் சாபங்களோடு
வாழ்வது அவ்வளவு எளிதல்ல
எப்படியேனும் கடந்தாக வேண்டும்
ஆசிர்வாதம் பெறாத அந்த இரவுகளை
கவிதைகளால்தான் அது முடியும்
விழித்தெழுக எழுத்துகளே
கவிதைகளுக்கென
ஆசிர்வதிக்கப் பெற்றவர்கள் நீங்கள்

7 comments:

  1. சிந்திக்க வைக்கிறியள்
    தொடருங்கள்
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு ஜீவலிங்கம்

      Delete
  2. சீனி நலமா? நீண்ட நாட்களாச்சு..........
    நான் வலைப்பூவுக்கு வந்தும். தாங்கள் இங்கு வந்தும்......

    ReplyDelete
  3. இப்போது கவிதை எழுதத்தான் அமர்ந்தேன் ஆதிரா. இதைப் படித்ததும் தூக்கம் சொக்குகிறதே? நித்ரா தேவியா நீங்கள்?

    ReplyDelete
  4. தாங்கள் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் ஜி. கவிதைகளாலும்........

    ReplyDelete