Saturday, November 17, 2018

நீதியரசர் ச.மோகன் அவர்களுக்கு பல்துறை வித்தகர் விருது


இன்று (30.10.18) உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் ச.மோகன் அவர்களுக்கு பல்துறை வித்தகர் என்னும் விருதளிப்பு விழா வெற்றிமுனை மாத இதழின் சார்பில் நடைபெற்றது.
இவ்விழாவினை நேர்த்தியாகத் திட்டமிட்டு நடத்திய நீதிபதி மு. புகழேந்தி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
நீதயரசர் ச.மோகன் அவர்களின் ஜூனியரும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசருமான திரு. துரைசாமி ராஜு தலைமை ஏற்றார்.
திராவிடர் கழகத்தின் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விருதினை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் விழா மலரை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார்.
ஸ்பிக் குழுமத்தின் தலைவர் திரு ஏ. சி.முத்தையா அவர்கள் மலரைப் பெற்றுக்கொண்டு வாழ்த்தினார்.
தாகூர் கல்விக் குழுமத்தின் தலைவர் டாக்டர் ராஜா பாதர், சேது பாஸ்கரா கலிவிக் குழுமத்தின் தலைவர் டாக்டர் சேது குமணன், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் திரு மாசிலாமணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
வெற்றிமுனை ஆசிரியரும் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையத்தின் தலைவருமான டாக்டர் மோ. பாட்டழகன் நனறி நவின்றார்.
நான் நிகழ்ச்சி நெறியாளராக......
வழக்கம் போல பாராட்டு மழையில்.......
திரு வீரமணி அவர்கள் நன்றாகப் பேசீனீர்கள் என்று கூறி பொன்னாடை போர்த்தும் போது ஒளிப்படக் கலைஞரை அழைத்து ஒளிப்படம் எடுக்கச் சொன்னார். நீதியரசர் ஏற்புரையின் போது பானுமதி இருக்காங்களே..... ரொம்பக் குறும்புக் காரி. இருக்கறது இல்லாதது எல்லாதையும் சொல்லுவார் என்றார். (அது பாராட்டா?! )
நீதியரசர் துரைசாமி ராஜு, நீதிபதி புகழேந்தி, டாக்டர் ராஜா பாதர், அன்பகம் டாக்டர் வீரமணி, டாக்டர் சேது குமணன் அவர்கள் மேடையில் பெண்களே இல்லை என்று வருந்தினேன். நீங்கள் இருந்தது நிறைவாக இருந்தது என்று கூறி அவரது கல்லூரியின் பேராசிரியர்களிடம் என்னைஅழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்துப் பாராட்டினார். என் மதிப்பிநீற்குரிய நீதியரசர் வள்ளிநாயகம் அவர்கள் உள்ளே நுழையும் போதே உற்சாகமாகப் பாராட்டினார் மூத்த வழக்கறிஞர் காந்தி கீழே இருந்தே சபாஷ் என்று சொல்லி சாடை செய்து பாராட்டினார். டாக்டர் சேயோன் (ஒவொரு முறை நான் பேசும் போது சைகையால் பாராட்டிக் கொண்டே இருந்தார். நிகழ்வு முடிந்ததும் மேடைக்கு வந்தும் பாராட்டினார். என் பேராசிரியர் டாக்டர் ஹேமா சந்தான கிருஷ்ணன் நீதியரசரிடம் என் மாணவி என் மாணவி என்று என்னை கட்டி அணைத்துக் கொண்டு சொன்னார். அன்பு நண்பர் கவிஞர் கோபிநாத் வழக்கம் போல பாராட்டியும் ஒளிப்படங்களை எடுத்தும் கொடுத்தார். நான் அறியாத இன்னும் பலரது பாராட்டு மழையில்.......
குறிப்பு... நன்றி என் நேசத்துக்குரிய கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்களுக்கு. நான் நிகழ்ச்சி நெறி ஆள்கையை ஒத்துக் கொள்வதில்லை என்று சொன்ன போது., அப்படி இல்லை, நல்ல பெரிய நிகழ்வாக இருந்தால் ஒத்துக் கொள்ளுங்கள், உங்கள் குரலும் நீங்கள் நெறிப்படுத்தும் விதமும் அழகாக இருக்கிறது என்று என்னை நெறிப் படுத்தியமைக்காக......






இன்று (30.10.18) உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் ச.மோகன் அவர்களுக்கு பல்துறை வித்தகர் என்னும் விருதளிப்பு விழா வெற்றிமுனை மாத இதழின் சார்பில் நடைபெற்றது.
இவ்விழாவினை நேர்த்தியாகத் திட்டமிட்டு நடத்திய நீதிபதி மு. புகழேந்தி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
நீதயரசர் ச.மோகன் அவர்களின் ஜூனியரும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசருமான திரு. துரைசாமி ராஜு தலைமை ஏற்றார்.
திராவிடர் கழகத்தின் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விருதினை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் விழா மலரை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார்.
ஸ்பிக் குழுமத்தின் தலைவர் திரு ஏ. சி.முத்தையா அவர்கள் மலரைப் பெற்றுக்கொண்டு வாழ்த்தினார்.
தாகூர் கல்விக் குழுமத்தின் தலைவர் டாக்டர் ராஜா பாதர், சேது பாஸ்கரா கலிவிக் குழுமத்தின் தலைவர் டாக்டர் சேது குமணன், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் திரு மாசிலாமணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
வெற்றிமுனை ஆசிரியரும் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையத்தின் தலைவருமான டாக்டர் மோ. பாட்டழகன் நனறி நவின்றார்.
நான் நிகழ்ச்சி நெறியாளராக......
வழக்கம் போல பாராட்டு மழையில்.......
திரு வீரமணி அவர்கள் நன்றாகப் பேசீனீர்கள் என்று கூறி பொன்னாடை போர்த்தும் போது ஒளிப்படக் கலைஞரை அழைத்து ஒளிப்படம் எடுக்கச் சொன்னார். நீதியரசர் ஏற்புரையின் போது பானுமதி இருக்காங்களே..... ரொம்பக் குறும்புக் காரி. இருக்கறது இல்லாதது எல்லாதையும் சொல்லுவார் என்றார். (அது பாராட்டா?! )
நீதியரசர் துரைசாமி ராஜு, நீதிபதி புகழேந்தி, டாக்டர் ராஜா பாதர், அன்பகம் டாக்டர் வீரமணி, டாக்டர் சேது குமணன் அவர்கள் மேடையில் பெண்களே இல்லை என்று வருந்தினேன். நீங்கள் இருந்தது நிறைவாக இருந்தது என்று கூறி அவரது கல்லூரியின் பேராசிரியர்களிடம் என்னைஅழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்துப் பாராட்டினார். என் மதிப்பிநீற்குரிய நீதியரசர் வள்ளிநாயகம் அவர்கள் உள்ளே நுழையும் போதே உற்சாகமாகப் பாராட்டினார் மூத்த வழக்கறிஞர் காந்தி கீழே இருந்தே சபாஷ் என்று சொல்லி சாடை செய்து பாராட்டினார். டாக்டர் சேயோன் (ஒவொரு முறை நான் பேசும் போது சைகையால் பாராட்டிக் கொண்டே இருந்தார். நிகழ்வு முடிந்ததும் மேடைக்கு வந்தும் பாராட்டினார். என் பேராசிரியர் டாக்டர் ஹேமா சந்தான கிருஷ்ணன் நீதியரசரிடம் என் மாணவி என் மாணவி என்று என்னை கட்டி அணைத்துக் கொண்டு சொன்னார். அன்பு நண்பர் கவிஞர் கோபிநாத் வழக்கம் போல பாராட்டியும் ஒளிப்படங்களை எடுத்தும் கொடுத்தார். நான் அறியாத இன்னும் பலரது பாராட்டு மழையில்.......
குறிப்பு... நன்றி என் நேசத்துக்குரிய கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்களுக்கு. நான் நிகழ்ச்சி நெறி ஆள்கையை ஒத்துக் கொள்வதில்லை என்று சொன்ன போது., அப்படி இல்லை, நல்ல பெரிய நிகழ்வாக இருந்தால் ஒத்துக் கொள்ளுங்கள், உங்கள் குரலும் நீங்கள் நெறிப்படுத்தும் விதமும் அழகாக இருக்கிறது என்று என்னை நெறிப் படுத்தியமைக்காக......

(ஜோ மல்லூரியின் மழையில்)


ஜோ மழையில் நனைந்தேன்.......
(ஜோ மல்லூரியின் மழையில்)
************************************************
காலையில் தெரியாத எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. நான் வணக்கம் என்று சொல்லி முடிக்கும் போது இந்தப் பக்கம் ஜோ மல்லூரி என்ற உற்சாகக் குரல். நான் என்னையும் அறியாமல் வாவ்வ்வ்வ்வ்வ்..... என்று உரத்துக் கூறிவிட்டு....... மகிழ்ச்சி வணக்கம் சொல்லுங்கள் என்றேன்.
அன்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது அருமையாக இருந்தது. அங்கு சொல்லிச் செல்லும் வாய்ப்பு இல்லாமல் இருந்தது. நீங்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தீர்கள். பிறகு அழைத்துப் பேசலாம் என்றால், நான் வெளியூர் பயணத்தில் இருந்தேன். அதனால்தான் தாமதமாகப் பேசுகிறேன். ஆரூர் தமிழ்நாடன் அவர்களிடம் உங்கள் எண் பெற்றேன். என்று பத்து நிமிடம் பேசினார். அதில் பாராட்டே மிஞ்சி இருந்தது.
இப்படிச் சொல்லி முடித்தார்.
மேடையில் உள்ளவர்களை அறிமுகம் செய்யும் போது பலரும் எழுதிக்கொடுப்பதைப் படித்து விட்டுப் போய்விடுவார்கள். நீங்கள் ஒவ்வொருவரையும் பற்றி நன்கு உள்வாங்கிக் கொண்டு அவர்களது சிறப்புகளைச் சொல்லி, மனமாறப் பாராட்டி அறிமுகப் படுத்தினீர்கள். அதில் ஒரு ஆழமான அன்போடு கூடிய ஈடுபாடும் ரசனையும் இருந்தது. என்று பாராட்டினார்.
அவரது பேச்சுக்கு அருகில் நானெல்லாம் நிற்கக் கூட முடியாது என்பதை நானறிவேன். அப்படிப் பட்ட ஆளுமை நம்மைப் பாராட்டுவதுதானே நமக்கு உற்சாகம் தரும். 16 நூல்களின் ஆசிரியரும் கவிஞரும் ஆகச் சிறந்த பேச்சாளரும் நடிகரும் இயக்குநரும் என்று பல்கலை வித்தகர் ஜோ மல்லூரி அவர்கள்.
அதிகாலையில் கொடுத்த உற்சாகத்திற்கு நன்றி ஜோ அவர்களே.

திரைப்பட நடிகராகப் பலரும் ரசித்த ஜோ மல்லூரி அவர்களை நான் இலக்கியவாதியாக அதிகமாக ரசித்துக் கொண்டிருக்கிறேன். திரைப்படத்தைப் பற்றி சொன்னாலும்,

புதுக்கவிதைக்கும் மரபுக்கவிதைக்கும் இடையிலொரு பொதுக்கவிதை பாடும்
மதுக்கவிஞர். மதுக்கவிஞர் என்றால் போதையில் தள்ளாடும் கவிஞர் அல்லர். மது போல மயக்கும் மதுரக் கவிதை பாடுபவர். ”வெற்றி பெறும் வரை மனதை யுத்த நிலையில் வை. வெற்றி பெற்ற பின் மனதை புத்த நிலையில் வை” என்று கவிதை பாடும் கும்கி யானை
மேடைப் பேச்சிலோ பட்டத்து யானை
நல்லதோர் தமிழ் செய்யத் தொடங்கி பெண் பேதை அல்ல மேதை என்று வரிசையாக 16 நூல்களைத் தமிழுக்குச் செய்து தந்தவர். அமிர்தா என்னும் அழகியோடு (நூலின் பெயர்) நீங்கள் இருந்தது போதும். இது நெய் ஊற்றும் நேரம் (இதுவும் நூல்). ஆம் பேரா. நளினி தேவிக்காக அன்பு நெய் ஊற்றும் நேரம். நடிப்புக் கல்லூரி, பேச்சுக்கல்லூரி, ஜோ மல்லூரி அவர்களே வருக!

என்று அவரது கவிதையையும் படைப்புகளையும் முன்வைத்து அவரை அறிமுகப் படுத்தியது மகிழ்ச்சியாக இருந்தது.


எப்போதும் அறிமுகம் இல்லாதவர்களோடு  ஒளிப்படம் எடுக்கவும் நானாகச் சென்று பேசவும் ஒரு தயக்கம் என்னிடம் உண்டு.  உங்களோடு ஒளிப்படம் இல்லை. அதனால் இந்தப் படம் இருக்கேஎனக்குச் சிறப்பு செய்வதை ஓரக்கண்களால் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள் ஜோ அவர்களே.... நன்றி

நளினி தேவியின் 3 நூல்கள் வெளியீட்டு விழா











பேராசிரியர் முனைவர் நளினிதேவியின் நூல் வெளியீட்டு விழா......... கலந்து கொண்ட அத்தனை பேரையும் இதயத்தோடு உறவாட வைத்த அன்புத் திருவிழாவாக இருந்தது.
நிகழ்ச்சி நெறியாளர் நான்.. வெகுவாகப் பாராட்டினார் பேரன்புப் பெட்டகமான கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்கள். கவிஞர் ஜெயபாஸ்கரன், திருமாவளவன், பேரா. ஹாஜா கனி மற்றும் அவ்வளவாக அறிமுகம் இல்லாத பலரும் பாராட்டினார்கள். சிலர் (பெண்கள்) எப்படி எங்களைப் பற்றியெல்லாம் நச் நச்சென்று சொன்னீர்கள் என்று வியப்பாகக் கேள்வி கேட்டுப் பாராட்டினார்கள். குறிப்பாக தமிழ் இந்து மானா பாஸ்கரன் அவர்கள் தொங்கட்டான் எப்படி உங்களுக்குத் தெரியும் என்று கேட்டு விட்டுப் பாராட்டிச் சென்றார்.
எல்லாம் நீங்க பாத்துக்கோங்க என்றும் வரவேற்புரையில் சொல்ல வேண்டியதையும் நீங்களே சொல்லுங்கள் என்றும் கூறி அவ்வளவு சுதந்திரம் கொடுத்தால் நிகழ்ச்சி எப்படி நேர்த்தியாக அமையாமல் இருக்கும்?ஆரூர் தமிழ்நாடன் அவர்களின் அந்த அன்புக்கே நிகழ்ச்சி நேர்த்தியாக அமைந்தது. (மேடையில் பேசியவர்கள் சுமார் 30 பேர்)
கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்களின் திருக்குமாரன் அவர்கள் (பெயர் நினைவில் இல்லை) இளைய ஆரூர் தமிழ்நாடன். மரியாதை,பேரன்பு சுறுசுறுப்பு, உதவி, தேடல் அத்தனையும் நிறைந்த இன்னொரு ஆரூர் தமிழ்நாடன்.
எங்கள் ஐயா... பேரா.இராம குருநாதன் கொடுத்த நேரத்திற்குள் பேச்சை முடித்து..... சரியா முடிச்சிட்டேனா என்று கேட்டுக்கொண்டே இறங்குவார். இப்போதும் அப்படியே..... பேச்சாளர்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டி. எப்போதும் போல இந்நிகழ்வுக்கும் என்னைப் பரிந்துரைத்தவர்.
கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்கள்..... எப்போதும் கலகலப்பாக,,,, ஊக்குவித்தல், பாராட்டுதல், உற்சாகப் படுத்துதல் என்று இருப்பவர். என் முன்னேற்றத்தில் அதிகம் அக்கறை கொண்ட என் புதுக்கவிதை ஆசான். அன்றும் அப்படியே........ ஆனால் மேடையில் நிறைய கலாய்த்தார்.
இவருடன் சேர்ந்து கொண்டு இதழியல் போராளி நக்கீரன் கோபால் அவர்களும் கலாய்த்து தள்ளிவிட்டார். ஆனால் எல்லாம் பாராட்டுக் கலாய்த்தல்.
மகிழ்ச்சியான நிகழ்வுக்கு....... காரணமான ஆரூர் தமிழுக்கு இனிய நன்றிகள்

Sunday, September 30, 2018

இன்று (30/09/18) பாசறை முரசு இதழின் வாசகர் வட்டம் சார்பில் பெரம்பூர் தென்னிந்தியப் பெளத்த சங்கத்தில் பெரியார் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டமாக ‘பெரியாரும் அண்ணாவும்’ என்னும் தலைப்பில் உரையாற்றினேன். எப்போதும் போல இல்லாமல் இது வேறுபட்ட நிகழ்வாக அமைந்தது.
நிகழ்வுக்கு என்னைப் பரிந்துரைத்த பாசறை முரசு இதழின் பொறுப்பாசிரியர் முனைவர் மோ. பாட்டழகன் அவர்களுக்கும் ஆசிரியர் பாசறை மு. பாலன் அவர்களுக்கும் நன்றிகள் பல. இரண்டு மூன்று பேர் பயனாடை அணிவித்து மகிழ்வித்தனர். இளம்பெண்களின் பாராட்டு மகிழ்வாக இருந்தது.

Image may contain: 6 people, people smiling, people standing

 
Image may contain: one or more people and people standing


Image may contain: one or more people, people standing and indoor



Image may contain: one or more people and people standing

Image may contain: 5 people, people sitting

Image may contain: 4 people, people smiling, indoor

Thursday, April 26, 2018

எங்கெங்கு காணினும் பாதாகைகள்

குற்றாலத்தில் அரிமா சங்க ஆண்டு விழாவில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. குற்றாலத்தில் காணும் இடமெல்லாம் அருவிகள்தான் இருக்கும். ஆனால் அன்று ஒரே பதாகைகள்தான் அணிவகுத்தன. (சொல்லனும்ல.......... நம்ம போட்டாவும் இருக்குதுல்ல........ சிறப்பு அழைப்பாளரா போயிட்டு அங்கங்க போட்டோ எடுத்தா நம்ம ]கெளரவம் என்ன ஆவரது. அதனால் ஒரே ஒரு போட்டோ மட்டும் எடுத்துக்கிட்டேன்).
இந்த அரிய வாய்ப்புக்கு இப்போது தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற அரிமா ஆளுநர் சுந்தரராசன் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். என்னைப் பேச அழைத்த போது தொலைபேசி உரையாடல் தொடங்கி தொடர்வண்டி பயணம், தென்காசியிலிருந்து அழைத்துச் சென்றது, அங்கு ஊர் சுற்றிப் பார்க்க கார் அனுப்பியது, மீண்டும் தொடர்வண்டி நிலையம் கொண்டு வந்து சேர்க்கும் வரை அன்பு உபசரிப்பு செய்தார். கிளம்பும் போது உங்களைத்தான் சரியாகக் கவனிக்க வில்லை என்று வேறு அங்கலாய்த்துக் கொண்டார். சரியாகக் கவனிப்பது என்பது அவரது அகராதியில் இதையும் விட அதிகம் போல.
இராமநாதபுர மாவட்டத்தின் முதல் பெண் அரிமா திருமதி ஜெயந்தி சுந்தரராசன் அவர்கள் அதனினும் அன்பு மழை பொழிந்தார். மேடையில் நின்று கொண்டிருந்தாலும் பார்வையெல்லாம் என் மீதே இருந்தது. கம்பன் விழாவுக்குக் கண்டிப்பாக வர வேண்டும் என்னும் அன்பு அழைப்போடு என்னை வழியனுப்பினார்.
இந்த இணையர் அரிமா மாவட்டத்தின் முதல் இணையர் (District first couple) என்னும் வார்த்தைகளை வைத்தே என் உரையைத் தொடங்கினேன். இந்த இணையரின் இந்தப் புகைப்படம் சிம்மக்குரலோன் சிவாசிகணேசன் அவர்கள் குரலில் சுந்தர ராசன் ஐயா அவர்கள் ஒரு பாட்டுப் பாடும் காட்சியை என் கண் முன் கொண்டுவந்தது.. அதாவது
“உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
பொன்னை மணந்ததனால் சபையில்
சபையில் புகழும் வளர்ந்ததடி
கால சுமைதாங்கி போலே
மார்பில் எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் விம்மல் தணியுமடி
ஆழம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்
பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
என் தேவையை யார் அறிவார்
உன்னை போல் தெய்வம் ஒன்றே அறியும்”
என்று கூறினேன். ஐயா அவர்கள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. சபையோர் முகத்திலும்.
இந்நிகழ்வுக்கு என்னைப் பரிந்துரை செய்த அன்பு சகோதரர் துரைமுருகன் அவர்களுக்கு என் நன்றியும் அன்பும்.
ஒன்றே ஒன்று தான் கொஞ்சம் நெருடலாக இருந்தது......
பைன் ஆப்பிள் ஜூஸ் (பழச்சாறு) என்று ஒன்று கொடுத்தார்கள். அது திப்பி திப்பியாக மென்று தின்பது போல இருந்தது. அதை அப்படியே வைத்து விட்டு வாட்டர் மெலான் ஜூஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதை வாங்கிக் கொண்டேன். அதுவும் துண்டுகளாக நறுக்கிப் போட்டிருந்தார்கள். மேடையில் அமர்ந்து எப்படி சாப்பிட..... அதற்குள் பின்னாலிருந்து ஒரு ஸ்பூனாவது கொடுத்திருக்கலாம் என்று வேறு பேசிக்கொண்டார்கள். குற்றாலத்தில் பழச்சாறு என்றால் கடித்துத் தின்பது போலத்தான் இருக்கும் போல.......

Sunday, April 1, 2018

சாதனைப் பெண்மணி விருது 08/03/18 உலக மகளிர் தினத்தில்

அஜந்தா பைன் ஆர்ட்ஸ் சார்பில் மகளிர் தினத்தன்று (8/3/18) சாதனைப் பெண்மணி விருது வழங்கினார்கள். ஜெயந்தி ஏ.எல்.எஸ் கண்ணப்பன் தலைமையில் இணை ஆணையர் (சுங்கம்) திருமதி கே. கோமதி அவர்களின் கரங்களால் வழங்கினார்.
சென்ற ஆண்டு கவிஞர் சிந்தை வாசன் அவர்களின் ஏற்பாட்டில் அஜந்தா பைன் ஆர்ட்ஸுக்காக திருச்சியில் பட்டி மன்றம் பேசியதும், இரு நாட்கள் மகிழ்ந்து இருந்ததும் இன்னும் கண்களிலும் நெஞ்சிலும் நிழலாடுகிறது. திருவரங்கத்தைச் சுற்றி உள்ள சிறு ஆலயங்கள் பலவற்றைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தோம். இனிமையில் நினைவுகள் இன்றும்......
அஜந்தா பைன் அர்ட்ஸின் நிறுவனர் அஜந்தா பாபு அவர்களுக்கு நன்றி.





Friday, March 30, 2018

இன்று மகாகவி பாரதியார் நகர் கிளை நூலகத்தில் முத்தமிழ் ஆய்வு மன்றத்தின் நிகழ்வில் விருது வழங்கி மகளிர் நாள் பெருவிழாவில் “பெண்ணின் பெருந்தக்க யாவுள” என்னும் தலைப்பில் சிறப்புரைஆற்றிய போது,,,,
ஒளிப்படம் எடுத்து அனுப்பிய அன்பு நண்பர் கவிஞர்
நம்ம ஊர் கோபிநாத் அவர்களுக்கு நன்றி













 


Saturday, October 28, 2017

அச்சமும் பொறுப்புணர்வும் நச்சரிப்பு செய்கின்றன







பல நிகழ்வுகளில் பங்கு பெறுகிறோம். சில நிகழ்வுகள் மன மகிழ்வைத் தருகின்றன. சில நிகழ்வுகள் இது போலொரு நிகழ்வுக்கு இனி போகவே கூடாது என்னும் உணர்வைத் தருகின்றன. சில நிகழ்வுகள் மனத்துக்கு நெருக்கமாக வந்து இதமானதொரு உணர்வையும் நெகிழ்வையும் ஏதாவது செய்தாக வேண்டும் என்னும் நச்சரிப்பையும் கொடுத்துக் கொண்டிருக்கும்.
            மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் முதியோர் இருக்கும் அன்பகம் என்னும் காப்பகத்தின் ஆண்டு விழாவுக்குத் தொடர்ந்து ஐந்து அண்டுகளாகக் குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவைத் தொடங்கி வைத்து வாழ்த்துரையும் வழங்கும் வகையில் சென்று கொண்டிருக்கிறேன்.
             அச்சமும் பொறுப்புணர்வும் கூட்டக் கூடிய ஒரு நிகழ்வு சென்ற ஆண்டு ஆண்டு விழாவில் அரங்கேறியது. ஆண்டு மலர் வெளியிட்டார்கள். பிரித்துப் பார்க்கிறேன் என் புகைப்படத்தைப் போட்டுத் துணைத்தலைவர் என்று அச்சிடப் பட்டிருந்தது. திடீரெண்டு அந்த அறிவிப்பை அன்பகத்தின் நிறுவனரும் செயலாளருமான டாக்டர் வீரமணி செய்தார்.
              இந்த ஆண்டு, நீதியரசர் ச. மோகன் தலைமையில் நேற்று நடந்த விழாவில் உடல்நிலை சரியில்லாத நிலையில் நீதியரசர் வந்து கலந்து கொண்டார். தொலைவு ஒன்றரை மணி நேர பயணம். நீதியரசரை நிகழ்வுக்குச் செல்ல வேண்டாம் என்று நானும் அலைபேசியில் அழைத்துச் சொன்னேன். ஆனால் வந்த அவர் பேசும் போதும் அதைக் கூறி இந்த மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் நான் நீதியாக நடந்து கொள்ளவில்லை என்றால் நான் இருந்து என்ன பயன் என்று உணவுப் பூர்வமாக உரத்த குரலில் சிம்மம் போல கர்ச்சித்துக் கூறினார்.
           அவர் பேச்சையும் செயலையும் (உடல்நிலை அவ்வளவு மோசமாக இருக்கும் போது அவ்வளவு தொலைவு பயணம் செய்து வந்தது) 
எதாவது செய்ய வேண்டும் என்னும் எண்ணம் மேலும் மேலும் எழுவதை எத்தனை முறையில் மனத்தை மாற்றினாலும் மாற்றவே முடியவில்லை. என்னால் முடிந்த உதவியை ஆண்டுதோறும் செய்தும் வருகிறேன். அது போதாது.... இன்னும் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று மனம் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டே இருக்கிறது.

          அரிமா டாக்டர் ரூபி மனோகரன், அரிமா டாக்டர் மணிலால், அரிமா சந்தானம், கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணன், கவிஞர் சிந்தை வாசன் முதலான சான்றோர் பலர் கலந்து கொண்ட நிறைவான விழா.
      நடிகர் கிங்காங்கும் போண்டா மணியும் ஆண்டுதோறும் வந்து அக்குழந்தைகளுக்காகக் கலை நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
                 அன்பகம் நிறுவனர் டாக்டர் வீரமணி அவர்களும் ஊனமுற்றவர். அவரும் அவரது குடும்பத்தாரும் இத்தொண்டிற்காகவே நலமாக வாழட்டும் என்று வாழ்த்தி வந்தேன். வாழ்த்துகிறேன்.

Sunday, October 22, 2017

கனவு தேவதையைக் கண்டேன்

கனவு தேவதையைக் கண்டேன்
*******************************************
என் நீண்ட நாளைய கனவு தேவதை கவிஞர். இரா. மீனாட்சியைக் காணும் பேறு இன்று கிடைத்தது . கையில் ஒரு பையுடன் அமர்ந்திருந்த அந்தத் தேவதையைக் கண்டவுடன் ஓடிச் சென்று பேசினேன். ஒரு ஐந்து நிமிட உரையாடல்தான். என்னைப் பற்றியும் கேட்டுக் கொண்டது. நான் ஆரோவில்லில்தானே எப்போதும் இருக்கிறேன, வாருங்களேன் என்று அன்பழைப்பும் விடுத்தது.
அந்தத் தேவதை இன்று கன்னிமாரா மத்திய நூலகத்தில் நடைபெற்ற பேராசிரியர் இராம. இராமநாதன் அவர்களின் சிலப்பதிகார ஒலிக் குறுந்தகடு வெளியீட்டு விழாவில் வாழ்த்து உரைக்க வந்திருந்தது. வாழ்த்தையும் அழகு ஒளிரும் கவிதையாக வாசித்தது. தேவதையின் அழகைப் போலவே குரலும் இனிமையாக ஒலித்தது.
நிகழ்ச்சி முடிந்தவுடன் நான் எழுத்தாளர் சங்கத்தின் எட்டையபுரம் பயணத்திற்கான தொகையைப் பெற்றுக்கொண்டு இருந்தேன்.ஒரே ஒரு நிமிடம்தான். ஒருவர் அம்மா கொடுக்கச் சொன்னார் என்று ஒரு பையைக் கொடுத்தார். எந்த அம்மா என்று நான் திரும்பிப் பார்க்கும் போது அந்தத் தேவதையைக் காணவில்லை. மகா கவிதை இதழ்கள் 4 மற்றும் பேராசிரியர்கள் குறிஞ்சி வேந்தன் & அருணன் இருவரும் இணைந்து பதிப்பித்த தேர்ந்தெடுத்த பாடல்களும் R.S.Pillai அவர்களின் ஆங்கில உரையும் அடங்கிய ‘சிலப்பதிகாரம்’ நூல், ஆரோவில் பற்றிய ஒரு துண்டறிக்கை என்று பையோடு கொடுத்து விட்டுச் சிட்டென்று பறந்தது இருந்தது அந்தத் தேவதை. தேடிக்கொண்டிருந்த தேவதையின் காட்சியைக் கண்ணிரண்டில் தேக்கியிருந்த மகிழ்விலும் தேவதையின் கைப்பையே வரமாகப் பெற்ற மகிழ்விலும் குறையேதும் இல்லாமல் திரும்பினேன்.
அருகில் இருப்பவர்கள் ஒலிப்பேழை வெளியிட்ட இராம. இராமநாதன், முனைவர் வாசுகி கண்ணப்பன் மற்றும் செம்மொழி மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் முகிலை. இராசபாண்டியன்



Tuesday, October 17, 2017

ஆதிரா முல்லை யின் நேர்காணல் - மக்கள் தொலைக்காட்சியில்..

ஆதிரா முல்லை யின் நேர்காணல் - மக்கள் தொலைக்காட்சியில்...
சற்றேறக் குறைய எட்டு மாதங்கள் (12/02/17/ கழிந்து விட்டன பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தி. இன்னும் பசுமையான நினைவுகள் மனத்தில். அக்கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களின் பாராட்டு மழை இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. இப்போது நினைத்தாலும் மகிழ்வையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தும் இப்பன்னாட்டுக் கருத்தரங்கைப் பார் போற்றும் மாபெரும் கருத்தரங்காக ஆக்கிய பெருமை இதில் பங்காற்றிய பாடாற்றிய பலருக்கும் உரியது. மீண்டும் இவ்வேளையில் அவர்களுக்கு நன்றி.
பாருங்கள்..... வாழ்த்துங்கள். மேலும் உற்சாகமாக உழைக்க உதவுங்கள்.......
நன்றி ஜோன்ஸ், மக்கள் தொலைக்காட்சி

https://www.facebook.com/aathiraa.mullai/videos/1783700848338775/

Sunday, October 15, 2017

பதிலிகள்


நேசம் என்பதன் பொருள்
புரிவதாக இல்லை
சரியும் போது
தாங்காத நேசங்கள்
மார் தட்டிக் கொள்கின்றன
நம் நிமிர்தலின் போது
தாழ்வில்
பயத்தோடு இருந்த நேசங்கள்
வாழ்வில்
பரவசப் படுவதாக நடிக்கின்றன
இல்லாத ஒன்று
சொல்லாமல் தெரிந்து விடுகின்றது
என்பதைப் புரிந்தும்
கண்டு கொள்வதில்லை
சில நேசங்கள்
பதிலிகளை எதிர்ப்பார்த்தே
சில நேசங்கள்
பரிகாசம் செய்வதற்கே
சில நேசங்கள்
இன்று நேசமாக இருக்கும் எதுவும்
அன்று நேசமாக இருந்ததில்லை
இருந்தாலும்
நெகிழும் போது விலகி
மகிழும் போது நெருங்கும்
நேசங்களோடும்
முரண்பட முடிவதில்லை
அன்றையும் இன்றையும்
அசை போட்டவாறு
உண்பதைப் போல
உடுப்பதைப் போல
நேசித்தும்
தொலைக்க வேண்டியுள்ளது
நேரம் தவறாமல்

பிரயோகம்



அத்தனையும் முடிந்த பின்பு
தெரிந்து கொள்கிறோம்….
நட்பு பகை
மேலதிகாரி கீழதிகாரி
இலக்கியவாதி பொதுநலவாதி
உற்றார் மற்றார்
உரார் உறவார்
மாற்றார் அயலார்
அக்கம் பக்கம்
அனைவருக்கும் தேவைப்படுவது
புகழ் மொழி
சொற்களை
மூட்டைக்கட்டிக் கொண்டு
முகம் பார்த்து
காலமறிந்து
அவிழ்த்துக் கொட்டி விட்டால்
எத்தனை கம்பீரமானவர்களையும்
வீழ்த்தி விடலாம்
சொல் ப்ரயோகம் தெரிந்தவர்கள்
வாழ்ந்து விடுகின்றார்கள்
சொற்களை ஏவ முடியாதவர்கள்
வீழ்ந்து விடுகின்றார்கள்
அத்தனையும் முடிந்த பின்பு
தெரிந்து கொள்கிறோம்….

மெளனமாய் இன்னும் மெளனமாய்....

Tuesday, August 29, 2017

ஆதி விருது பெற்ற இனிய தருணம்


வின் தொலைக்காட்சியின் ஆதி விருதினை உங்கள் ஆதிரா பெற்ற இனிய தருணம்.
நன்றி டாக்டர் தேவநாதன் யாதவ்
திரு குணசீலன்


Sunday, June 25, 2017

ஆண்மையில் பெண்மை


தான் சுகித்த
மலர்களின்
மழலைகளைக்
கால்களில்
சுமந்து சென்று
வளர்க்கும்
பேரன்பு
தும்பிகள்
ஆண்மையின் அடையாளம் அல்ல
தாய்மையின் நிரூபணம்

Thursday, June 22, 2017

குழந்தைகளற்ற வெறுமையில் தட்டான்கள்


துரத்திப் பிடிக்கவும்
வால் பிடித்து சீண்டவும்
சிறகுகளைப் பிடித்து
உள்ளங்கையில்
சிறைப்படுத்தவும்
குழந்தைகளற்ற
வெறுமையில்
பறந்து கொண்டிருக்கின்றன
மழை காலத்துத்
தட்டான்கள்!

Saturday, June 3, 2017

‘ஆதிராவின் கவிதை உலகம்’ - பேராசிரியர். முனைவர். இரா.மோகன் - மதுரை



என் கவிதை உலகினைத் தம் பொற்கரங்களால் வரைந்துள்ளார் - மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் தமிழியற்துறை முன்னைப் பேராசிரியர் இரா. மோகன் அவர்கள்
***************************************************************************************
என் கவிதை நூலுக்கு மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் முன்னைத் தகைசால் பேராசிரியர் முனைவர். இரா.மோகன் அவர்களின் அழகான கருத்துரை.
18/01/2017 அன்று உலகத்தமிழ்ச்சங்கம் நடத்திய திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டு நானும் கட்டுரை வாசித்தேன். அப்போது என் கவிதை நூலினை, பேராசிரியர் இரா.மோகன் அவர்களிடம் கொடுத்தேன். அந்த விழாவினை
உலகத்தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து வடிவமைத்தவர் அவர்தான்.
பெரும்பான்மையினர் நூல் கொடுத்தால் வாங்கி பிறருக்கு அன்பளிப்பாகக் கொடுப்பர். இல்லாவிட்டால் வீட்டு நூல் அடுக்கில் அதுவும நூல்களோடு நூலாக ஒளிந்து கொள்ளும். ஆனால் பேராசிரியர் மோகன் ஐயா அவர்கள் உடனடியாகப் படித்து அந்நூல் குறித்து தம் பார்வையை ‘ஆதிராவின் கவிதை உலகம்’ என்று தலைப்பிட்டு எழுதி எனக்கும் ஒரு சிற்றிதழ்களுக்கும் அனுப்பி உள்ளார். அக்கட்டுரை தமிழ் ஆர்த்தர்ஸ்.காம் என்னும் வலைத்தளத்திற்கும் அனுப்பி உள்ளார். அலைபேசியில் அழைத்து மகிழ்ச்சி பொங்கும் குரலில் “நூலினைத் திறந்து பார்த்தேன், உடனே எழுது என்று நான்கைந்து கவிதைகள் என்னை அழைத்தன. எழுதிவிட்டேன் என்று என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.
நினைத்துப் பார்க்காத அளவுக்கு அழகான உலகமாக என் கவிதை உலகத்தைத் தங்கள் கரங்களால் வரைந்துள்ளீர்கள். தங்கள் பொற்கரங்களால் உச்சி முகரப் பட்ட இத்தருணம் என் வாழ்வில் மறக்க இயலாத பொன்னான தருணம். இந்தத் தருணத்தை சாத்தியப் படுத்திய, தங்கள் அன்புக்கு ஈடாக என்ன செய்ய இயலும் இந்தச் சின்னவளால் என்று தெரியவில்லை. அன்பைத் தவிர வேறு எது அன்புக்கு ஈடாக இருக்க இயலும். என் மனம் நிறைந்த அன்பையும் நன்றியையும் மலர்களாக்கி அனுப்பியுள்ளேன். மனம் நிறைந்த நன்றிகள் ஐயா

கட்டுரையைக் காண இங்கே சொடுக்கவும்.