Tuesday, August 3, 2010

ஒவ்வொரு செல்லிலும்,,,,,,

































 http://t0.gstatic.com/images?q=tbn:F4Rw4V_1sOiJeM:http://i.ytimg.com/vi/Nj1EMt4Tnes/hqdefault.jpg&t=1

காதோரம் 
குசுகுசுப்பாய!

தொலைவினிலே
நீயிருந்தும 
தொடராகப் பேசிடுவாய!

சாமத்தில் 
கைப்பேசி இடையிருக்க
சொல் முத்தம் தனை வீசி
திராவிடப்போர்
புரிந்திடுவாய்!

வழிந்து விட்ட 
காதல் ரசம்
கதகதப்பைக் கூட்டிவிட
செல்பேசி
நாணத்தால்
முகம் சிவக்கும்!


 காணாத
காட்சியெலாம்
கற்பனையில்
கண்டுவிட
செல்
வெட்கத்தால்
கண்மூடும்!

செல்லுக்குத் தெரியாது
என் ஒவ்வொரு செல்லிலும் 
நீயே 
நிறைந்து இருப்பது!









No comments:

Post a Comment