Tuesday, August 3, 2010

மங்கையும் மனைவியும்

மங்கை
என்ற காரணத்தால்!
இந்திரனின் உள்ளச்சிறையில்
அகப்பட்டுக்
கல்லான
அகலிகைக்கு
உயிர் தந்து
கடவுளானான்!

 மனைவி
என்ற காரணத்தால்
இராவணனின்
இல்லச்சிறையில்
அகப்பட்ட
உயிர்ப்பாவை
மைதிலியை
உயிரோடு எரியூட்ட
கல்லாகினான்.




...

2 comments: