Tuesday, November 6, 2012

சிவகாசியின் குட்டி தேவதைகள்







சுவர்க்கத்திற்குச் செல்லும்
வழியறியாது
பையூரில் பயணித்த
குட்டித் தேவதைகள்
வந்திறங்கின
அந்த சிவகாசியில்

சூரியக் குழம்புடன்
வெண்மேகத்துக்குள் ஒளிந்திருந்த
இடிகளை பொடித்து
இட்டும் தொட்டும்
கனவில் பூத்த
வண்ணம் சேர்த்தும்

நமக்கான
விருந்தினைத் தயாரிக்கின்றன
தேவதைகளின்
சின்னஞ்சிறு விரல்கள்
வெடிகளாக

நிலவை
எட்டி உடைத்து
தெறித்து விடுகிறது
அந்தத் திருநாள் கொண்டாட்டம்

வெடித்துச் சிதறிய 
வெண்ணிலவின் சில்லுகள்தோறும்
விபத்தில் சிதறிய
அந்தப் மோனாலிசாக்களின்
ஏக்க முகங்கள்!!



10 comments:


  1. தெரிந்தாலும் வாண வேடிக்கைக்களில் அந்தச் சிறார்களின் குறுஞ்சிரிப்பையும் காண வேண்டும் . அதற்குத்தானே அவ்வளவு பாடு படுகிறார்கள். குழந்தைத் தொழிலாளிகளை மறுக்க வேண்டும்.அதில் முனைப்பு தேவை.

    ReplyDelete
    Replies
    1. அதைத்தான் சொல்லி இருக்கிறேன் ஐயா. நன்றி

      Delete
  2. அருமை! சிவகாசி தேவதைகளை வர்ணித்த சிறப்பான கவிதை! அந்த சிறுபிஞ்சுகளுக்காவது பட்டாசு கொளுத்துவோம்! குழந்தை தொழிலாளிகளை தடை செய்ய ஒத்துழைப்போம்!

    ReplyDelete
    Replies
    1. அந்த சிறு பிஞ்சுகளுக்காகப் பட்டாசு கொளுத்தாது விடுவது இக்கவிதையின் நோக்கம் தோழர் சுரேஷ்.

      முதல் வருகை மகிழ்ச்சியாக... முதல் கருத்து நிறைவாக..
      மனம் நிறைந்த நன்றிகள் சுரேஷ்.

      Delete
  3. படமும் பாடலும் மனதைத் தைத்தன....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வெங்கட்

      Delete
  4. vekkangolla sythathu..

    ungalathu padam...

    kuzhanthai thozhilaali murai -
    izhiya vendum...

    ReplyDelete
    Replies
    1. ஆம் சீனி. வெட்கம் மட்டுமல்ல. வேதனையும். குழந்தைகளை இப்படிப் பயன்படுத்திக் கொண்டு நாம் வல்லரசு கனவு காண்கிறோம்.

      Delete
  5. படமே சோகக் கவிதை. படத்தைப் பார்த்ததும் மேலே படிக்கவே தோணலிங்க.

    ReplyDelete