Saturday, November 17, 2018


#தீபாவளி கொண்டாடி ஆச்சு
இன்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் ச. மோகன் அவர்களோடு நர்பவி முதியோர் இல்லத்துக்குச் சென்று தீபாவளி கொண்டாடி வந்தேன். எல்லோர்க்கும் புதுப்புடவை, இனிப்பு, காரம், பட்டாசுகள ஆகியவற்றைக் கொடுத்தார். பெற்றுக்கொள்ளும் போது அவர்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. மத்தாப்பையும் பூச்சட்டியையும் ஏற்றும் போது உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட என்னும் பாடலைப் பாடிக்கொண்டே சுற்றிச் சுற்றி வந்தார்கள். 2 மணி நேரம் அற்புதமான உற்சாகமாகக் கழிந்தது. நீதியரசரின் மறுமகள் திருமதி லலிதா, இல்லத்தின் செயலாளர் திருமதி லட்சுமி கண்ணன், காவல் துறை அதிகாரி கணபதி ஆகியோரும் வந்திருந்தனர்














No comments:

Post a Comment