Sunday, November 17, 2019

தொல்காப்பியத்தில் தமிழிசை - தமிழிசைச் சங்கத்தில்

தொல்காப்பியத்தில் தமிழிசை .

21/08/19 அன்று ராஜா அண்ணாமலை மன்றத்தில் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கமும் தமிழிசைக் கல்லூரியும் இணைந்து நடத்திய காலந்தோறும் தமிழிசை என்னும் சிறப்புக் கருத்தரங்கில் நீதியரசர் மகாதேவன் தொடக்கவுரை ஆற்றினார்.
அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் செயலாளர் இதயகீதம் இராமனுஜம் வரவேற்றார். தலைவர் முனைவர் கோ.பெரியண்ணன் தலைமை உரையாற்றினார்.
தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறையின் செயலர் முனைவர் ஒளவை அருள், டாக்டர் சீர்காழி சிவ சிதம்பரம், தமிழிசைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் மீனாட்சி, கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணன் ஆகியோர் அமர்வுகளுக்குத் தலைமை வகித்து அற்புதமாக உரையாற்றினர்.
இலக்கிய வள்ளல் மாம்பலம் ஆ.சந்திரசேகர், கல்வியாளர் அமுதா பாலகிருஷ்ணன், க்ச்ல்வியாளர் நேமிதாஸ், இலக்கிய மாமணி ரூசவெல்ட் ஆகியோர் ஒவ்வொரு அமர்விலும் பங்கு பெற்றவர்களுக்குச் சிறப்புச் செய்தனர்.
அடியேன் முனைவர் ஒளவை அருள் தலைமையில் தொல்காப்பியத்தில் தமிழிசை என்னும் தலைப்பில் ஆய்வுரை ஆற்றினேன்.
நிறைவான நிகழ்வு. நினைவிகளின் நிழல்கள் சில.....

தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் அருள் நடராஜன் தலைமையில் கல்வியாளர் டாக்டர் அமுதா பாலகிருஷ்ணன் முன்னிலையில்...
நன்றி தமிழிசைச் சங்கம்





No comments:

Post a Comment