Tuesday, September 15, 2015

தமிழச்சிக்கு வாழ்த்துகள்

11.09.15 அன்று  நம்ம செல்லத்தமிழச்சி பாரதி பணிச்செல்வர் விருது பெற்றார்கள்.. அழகா குட்டியா ஒரு ஏற்புரை சொன்னாங்க. அவர்களை வாழ்த்தி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட போது.......
சென்ற ஆண்டு இவ்விருதினைப் பெறும் பேற்றினை நானும் பெற்றது மகிழ்வாக



Saturday, September 5, 2015

ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு....

ஆசிரியர் தினமான (05.-09.15) இன்று தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்திடமிருந்துஆசிரியர் செம்மல் விருதுபெற்ற நெகிழ்வான தருணம். 
*************************************************************************************************
*
இனிக்க இனிக்கத் தமிழில் பேசும் இளைய சமுதாயத்திற்காகத் தொண்டாற்றும் மாண்பமை நீதியரசர் ஆர். மகாதேவன் அவர்களிடமிருந்து விருது பெற்றது இனிது.
* யாருடைய பிறந்தநாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப் பெறுகிறதோ அவரது இல்லத்தில் இவ்விருதினைப் பெற்றது இனீதினும் இனிது.
* விருது பெற்றவர்களின் சார்பில் ஏற்புரையாற்றியது மேலும் நெகிழ்வு.
* முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களது இல்லம் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து அவர் வசித்த இடத்தின் காற்றையெல்லாம் சுவாசித்துத் தீராமல்..... தீரும்பியது பெரிதினும் பெரிது.
.* டாக்டர் இராதா கிருஷ்ணன் அவர்களது பெயர்த்தி (தள்ளாத வயதிலும்) இனிதாக வரவேற்று எல்லோருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டது மகிழ்வினும் மகிழ்வு.
* இத்தனைக்கும் அன்புச் சகோதரர் நல்லாசிரியர் முனைவர். கோ. பெரியண்ணன் அவர்களுக்கு நன்றி.
*************************************************************************************************
எல்லாவற்றுக்கும் மேலாக எத்தனை புகைப்படங்கள்!!!! கவிஞர் நம்ம ஊர் கோபி... உங்களுக்கு நன்றியெல்லாம் கிடையாது. அன்பு....... அன்பு... அன்பு.... அன்பு மட்டும்தான்.
*************************************************************************************************