பல்லாயிரம் பட்டாம்பூச்சிகள்
மூடிய விழிகளில்
கண்களைத் தழுவாத உறக்கத்தின் முனகல்
வெய்யில் கால மண்புழுவாய் நெளியும் மேனி
காலையில் கட்ட சேலை, கரண்ட் பில்
மேலாளருக்குச் சொல்லப் பொய்,
காபிக்குச் சர்க்கரை, கவிதைக்குக் கரு
தொடர் வண்டியாய்...
ஈரத்துணியாய் கனத்த இமைகள்
சுமைகள் தாண்டி உறங்கும் நேரம்
முடிந்து விட்டது
மொத்த இரவும்!