புத்தகங்களைக் கட்டிக்கொண்டு
உறங்கிக் கொண்டிருந்தது
அந்த
வளர்ந்த குழந்தை!
அன்று மட்டும்…..
புதுப் புத்தகம் வாங்க
வேகமாக ஓடாமல் இருந்திருந்தால்…..
அந்தக் காரின் முன்
விழாமல் இருந்திருந்தால்….
முன்னங்கால் முழுதும்
முடமாகாமல் இருந்திருந்தால்…..
அப்பா பள்ளிக்கு முழுக்குப் போடச்
சொல்லாமல் இருந்திருந்தால்…..
உள்வீட்டில்
சக்கர
நாற்காலியில்
சிறைப்படாமல் இருந்திருந்தால்….
இன்று
தானும் ஒரு
கணினி விஞ்ஞானி
என்னும்
முடமாகிப் போன கனவுகளுடன்!