Thursday, May 31, 2012
Wednesday, May 30, 2012
Monday, May 28, 2012
Thursday, May 24, 2012
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன்!
தொப்புள் கொடியில் பூக்காத
பிள்ளை மலரே
நாளும்
குருதியில் வளராத
இரத்த உறவே
முந்நூறு நாட்கள்
கருவறை தவம்
செய்யவில்லை
மூன்றே நொடியில்
முழுவதுமாக
முத்துப் பிள்ளையை
ஈன்றெடுத்த
நிகழ் யுகக்
குந்தி நான்
அவளைப் போல
எவரும அறியாமல்
பெட்டியில் வைத்து
நதி நீரில் விட்டுவிட
நான் தயாரில்லை
நீ மட்டுமே அறிய
மனப்பெட்டியில்
உனை வைத்து
அடை காக்கிறேன்
என் நெஞ்சத்து
ஏக்கச் சூட்டில்
Subscribe to:
Posts (Atom)