Thursday, May 31, 2012

அல்லியைப் பார்த்து நிலவு மலர்கிறது..


நிலவைப் பார்த்து
அல்லி மலரும்
என்பார்கள்

இங்கு
கால் முளைத்த
இந்த
அல்லியைப் பார்க்க
நிலவு மலர்ந்துள்ளது!!

Monday, May 28, 2012

ஏமாற்றிச் சென்றது ஏன் ஆண்மழையே


சொல்லாமல் கொள்ளாமல் வந்தாய்
கண்களில்
கன்னங்களில்
இதழ்களில்
பரவசமாய்
குளிர் முத்துக்களைப்
பதித்தாய்
இனிக்கும் ஈரச்சுவை
இன்னும் இன்னும் என்று
ஏங்கி நிற்கையிலே
ஏமாற்றிச் சென்றது ஏன்
ஆண்மழையே
நீயும் என் காதலனாய்




Thursday, May 24, 2012

ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன்!




தொப்புள் கொடியில் பூக்காத
பிள்ளை மலரே
நாளும் 
குருதியில் வளராத
இரத்த உறவே


முந்நூறு நாட்கள்
கருவறை தவம் 
செய்யவில்லை
மூன்றே நொடியில்
முழுவதுமாக
முத்துப் பிள்ளையை
ஈன்றெடுத்த 
நிகழ் யுகக் 
குந்தி நான்


அவளைப் போல
எவரும அறியாமல்
பெட்டியில் வைத்து
நதி நீரில் விட்டுவிட
நான் தயாரில்லை


நீ மட்டுமே அறிய
மனப்பெட்டியில்
உனை வைத்து
அடை காக்கிறேன்
என் நெஞ்சத்து
ஏக்கச் சூட்டில்