Wednesday, February 17, 2016

வாகை சூட....



நம் மீது எத்தனைக் கற்கள்
எறியப் படுகின்றன
சிலவற்றில்
உறவுப்பெயர்கள் 
சிலவற்றில்
உறவற்றவர்களின் பெயர்கள்
சிவவற்றில்
நட்புப் பெயர்கள்
சில சினத்தோடு
சில சில்மிஷம் பூசப்பட்ட
சிரிப்போடு
சில வன்மத்தோடு
சில வன்முறைகளோடு
சில துரோகங்களோடு
சில புன்னகையோடு
ஒவ்வொரு கல்லிலிருந்தும்
ஒரு பூ நமக்காகப் பூக்கிறது
அவை
வாகையாக்கி நம்மைச் சூடுகின்றன!

Saturday, February 13, 2016

பன்னாட்டு அலையன்ஸ் சங்க விருது.. உங்கள் ஆதிராவுக்கு....

பன்னாட்டு அலையன்ஸ் சங்கம் எனக்கு தலைமைப் பண்பிற்கான விருதினை வழங்கியது. இந்த மதிப்புறு வில்லையை எனக்கு அளித்து அடுத்து அடுத்து பலமுறை தகுதியானவர் என்று என்னைப் பாராட்டிய பன்னாட்டு இயக்குநர் அலை.டி. ராம்சிங் அவர்களுக்கும் அலையன்ஸ் சங்கத்தில் எப்போதும் என்னை ஆற்றுப் படுத்திக்கொண்டிருக்கும் மாவட்ட சாசன ஆளுநர் அலை. இரா.மதிவாணன் அவர்களுக்கும் நன்றிகள்






ஒன்னுமே செய்யல்லன்னா விருது கொடுப்பாங்களோ...!!!