Tuesday, June 26, 2012
Saturday, June 23, 2012
Tuesday, June 19, 2012
Friday, June 15, 2012
Sunday, June 10, 2012
Saturday, June 9, 2012
சவங்கள்!
என்றோ
மாய்ந்து போன
காதலின்
சுவடுகளை
சவக்குழியில்
புதைக்க நினைக்கிறேன்.
அறிவுப் பாடையில்
அரங்கேறிய
ஆயிரமாயிரம்
அணுக்களில் இருந்தும்
பிடுங்கி எடுத்த
நினைவின்
நீண்ட நெடிய
கடைசி
ஊர்வலத்திற்கு
இதயம்
அடிக்கிறது
தாரை தப்பட்டை
கண்கள்
கன்னத் தெருவெங்கும்.
மத்தாப்புப்
பூக்களை
உதிர்க்கிறது
நாவின்
புலம்பல்
நர்த்தனத்துடன்
இறுதிச்சடங்கு
நடக்கிறது
என்னுள்ளிருந்து
இடம்பெயர்ந்தது
அந்த நாட்கள்
என்றிருக்கும்போது
பிரேதப்
பரிசோதனைக்காகத்
தோண்டி எடுக்கப்படும்
பிணங்களாய்
மீண்டும்
மெல்ல மெல்ல
மேலெழுகின்றன
நினைவுச் சவங்கள்!
Thursday, June 7, 2012
Wednesday, June 6, 2012
Sunday, June 3, 2012
தமிழின் தலைமகனுக்கு ஒரு வாழ்த்து
கல்லணை தந்தான் சோழன்
கனித்தமிழ் செழிக்க மேடை
சொல்லணை தந்தாய் நீதான்
சுவையணை வரியில் வைத்தாய்
பல்லணை பயிர்க்குத் தந்தாய்
பழந்தமிழ் நீயே காத்தாய்
நெல்லணை தஞ்சை வளத்தை
நிதம்நிதம் நாட்டில் வார்த்தாய்
அஞ்சுகத் தாயின் மைந்தா
ஐம்முறை ஆட்சி கண்டாய்
நஞ்சிடும் வைதீ கத்தின்
நரம்பினை அறுத்துச் சாய்த்தாய்
கொஞ்சிடும் ச்ங்கப் பாட்டைக்
குப்பனும் கேட்க வைத்தாய்
அஞ்சிடும் பெரியார் தொண்டின்
அனலென பகையைத் தீய்த்தாய்
அண்ணனின் கொள்கை காத்தாய்
அவர்புகழ் உலகு சேர்த்தாய்
தென்னவர் பண்பாட் டுக்குக்
திருக்குறள் கோட்டம் கண்டாய்
கண்ணகி சிலம்பைக் காட்டும்
கடற்கரை சிலையை வைத்தாய்
தண்டமிழ் தலைவா நீயும்
தரைகடல் காலம் வாழ்க!
Friday, June 1, 2012
Subscribe to:
Posts (Atom)