Wednesday, September 25, 2013

அலமாரி பொம்மைகள்



விழிகளில்
ஏக்கப் பூக்களை ஏந்தி
முதியோர் இல்லங்களில்
காத்திருக்கும்
பெற்றோர்களைப் போல…

ஏக்கத்துடன்
வெறித்துப்
பார்த்துக் கொண்டே
இருக்கின்றன..

வளர்ந்த குழந்தைகளின்
ஸ்பரிசத்திற்காக

அலமாரியில்
ஒதுக்கப் பட்ட
அவர்கள் விளையாடிய
பொம்மைகள்

Saturday, September 21, 2013

குழந்தைகளின் உலகில்

தன்னைத் தானே
கோபித்துக் கொண்டன

கொஞ்சலும் கோபமும்

காமமில்லாத 
தழுவல்களும்
மோகமில்லாத 
முத்தங்களும்
நிறைந்த

குழந்தைகளின் உலகில்

பொம்மையாகாது

கயவர்களின் 

உலகில்
கடவுளாகிப் போனதை
எண்ணிய

சிலைகள்

Sunday, September 15, 2013

முத்தச் சந்தம்




வானம்
இதழ் குவித்து
மழைத் துளியால்
மண் காதலியை
முத்தமிடும்
சந்தத்தில்...

உயிர்ப்பது...


மரங்களின்

சந்ததிகள் மட்டுமல்ல
மக்களின் சந்ததிகளும்