Monday, October 25, 2010

மந்திரம்..

http://www.redbookmag.com/cm/redbook/images/LP/woman-on-floor-writing-1-0110-mdn.jpg
உன்னை உச்சரிப்பதனால்
என் நாவுக்கும்
எழுதுவதால்
என் எழுதுகோல் நாவுக்கும்
ஆனந்தம் அதிகமாவதை
நீ எவ்வாறு அறிவாய்!!




Thursday, October 21, 2010

கல்லல்ல..


http://img522.imageshack.us/img522/3994/vm78.jpg 

சேமிக்க நினைத்த
கனங்களைச் செலவழித்தேன்
தொலைக்க வேண்டிய
தருணங்களை 
நினைவுகளாக்கி
நெஞ்சு கணக்கச் 
சேமித்தேன்

கனங்கள் நழுவி
நாட்களாய்
மாதங்களாய் 
வருஷங்களாய் நீள
நினைவலைகளில்
கரைந்து கொண்டிருக்கின்றது
ஆயுளும்
நீ கொடுத்த உறுதிமொழிகளும்
மெல்ல மெல்ல!

சுகத்தில் அழுவதும்
சோகத்தில் எழுவதும்
கவிதை எழுத்துக்களுக்கு
மட்டுமே சாத்தியம்!

சிதைந்த கணக்கை
வெட்டுவதும்
சீராக்கி ஒட்டுவதும்
கணிப்பொறிக்கு மட்டுமே
கிட்டிய வரம்!

உடைந்த 
இதயச் சில்லுகளைச்
செதுக்கி வார்ப்பதற்கு
நானும் கல்லல்ல,
நீயும் 
கைதேர்ந்த
கணபதி ஸ்தபதி அல்ல!




Wednesday, October 20, 2010

நானும் கல்லல்ல....


சேமிக்க நினைத்த
கனங்களைச் செலவழித்தேன்
நட்டமெனத் தொலைக்க வேண்டிய
தருணங்களை நினைவுகளாக்கி
நெஞ்சு கணக்கச் சேமித்தேன்

கனங்கள் நழுவி
நாட்களாய்
மாதங்களாய் நீள
நினைவலைகளில்
கரைந்து கொண்டிருக்கின்றது
ஆயுள்!
நீ கொடுத்த உறுதிமொழிகளும்
மெல்ல மெல்ல
மூழ்கிக் கொண்டிருக்கிறது

சுகத்தில் அழுவதும்
சோகத்தில் எழுவதும்
கவிதை எழுத்துக்களுக்கு
மட்டுமே சாத்தியம்

சிதைந்த கணக்கை
வெட்டுவதும்
சீராக்கி ஒட்டுவதும்
கணிப்பொறிக்கு மட்டுமே
கிட்டிய வரம்!

உடைந்த சில்லுகளைச்
செதுக்கி வார்ப்பதற்கு
நானும் கல்லல்ல,
நீயும்
கணபதி ஸ்தபதி அல்ல!

Saturday, October 16, 2010

என் இரவு நண்பன்......






இரவு நண்பன் நீ
இனிமைக் கதைகளுக்கும்
இளமைக் கதைகளுக்கும்
கண்ணீரிக் கதைகளுக்கும்
முதலாம் சாட்சி நீ!

ஈருடல் சேரும்
பரவச வேளையில்
இங்கிதம் தெரியா
மனிதர்கள் இவரென்று
முனுமுனுத் திருப்பாயோ?

அங்கத லீலைகள்
அனுதினம் கண்டு
ம்கிழ்ச்சிக் பொங்க
மோன நிலையில்
பூரித்திருப்பாயோ?

மெளன மொழியும்
அறியா உன்னை
மந்திரவாதியாய்
உருவகத்திடும்
அவலம் கண்டு
புழுங்கிச் சாவாயோ?

அழுக்குத் தலையும்
ஈரும் பேணும்
அனுதினம் உன்மேல்
அழுந்துவதனால்
அதிர்ந்து போவாயோ?

அவ்வப்போது மாற்றாவிடினும்
எப்போதாவது சட்டையைமாற்றி
முடை நாற்றத்தின்
மூர்ச்சையில் இருந்து
தெளிய வைப்பார்களா
என்று ஏங்கியிருப்பாயா?

சிவப்பு முக்கோணம்
செய்யும் வேலையைச்
சில நேரங்களில்
செய்வதை எண்ணி
செம்மாந்து இருப்பாயா?

கல்மனக் காரர்கள்
காலுக்குள் போட்டு
மிதிப்பதனாலே
மதிக்கத்தெரியா
மனிதரென்றெண்ணி
மன்னித்திருப்பாயா?

மடியிலுன்னை
சீராட்டுகையிலே
சிந்தனையூற்றாய்
பிராவாகித்து
சீர்கவிதை
பொழிவாயோ?

கட்டில் போரில்
ஆயுதமாகவும்
கேடயமாகவும்
அவதரிப் பதனால்
ஆண்மை கொள்வாயோ?

பஞ்சுப் பொதியே!
எண்ணங்களாகி
பருத்து இருப்பாயோ?
ஓய்வு பெறுமுன்
அனுபவம் கூறி
அமைதி அடைவாயோ?