Sunday, July 29, 2012
Wednesday, July 25, 2012
இனிய கவிதைக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
முறைவைத்து முகம் காட்டும் நிலவல்லநீ
என் அறைக்குள்ளும் வந்துநிதம்
அட்சரங்கள் பதித்தாய்
சிறைவைத்தாய்
முகநுலின் சிட்டுகளை
இதயத்தில்!
உன் உதயத்தால்
சிறகடித்துப் பறக்கின்றோம்!
எழுத்து ஏழை நான்!
வரம்கேட்டேன் வாழ்த்து சொல்ல
வழக்கம்போல்
வார்த்தை வரம் கிட்டவில்லை
மனமலரைப் பறித்தெடுத்து
நினைவுகளால் மணம் கூட்டி
இணையத் தென்றலிலே அனுப்புகிறேன்
ஏற்று அருளும்
இதமான இதயம் அது
என்பதனால்!
இனிய கவிதைக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
எளிமையும் இனிமையும் ததும்பும் பாவலரே எங்களுடன் என்றும் இணைந்து இருக்கும் கருணையும் வேண்டி..... தங்களைப் பல்லாண்டு வாழ்க! என வாழ்த்துகிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பழனி பாரதி சார்.
Saturday, July 21, 2012
Tuesday, July 10, 2012
Monday, July 9, 2012
Sunday, July 8, 2012
Saturday, July 7, 2012
Sunday, July 1, 2012
உறங்காத அந்த விடியல்
வண்ண வண்ணமாக
கண்களில் வந்து போகும
கோல
கலர்க் கனவில்
உறங்காத
அந்த விடியல்
சாணி வாசம்
சுகந்தமாய் வீசும்
குளிர்ச்சியான
மண் தரை
போட்டி போட்டு
பூசனிப் பூவை
சாணியில் நட்டு வைக்கும்
அம்மாவின் கோலம்
குளித்தவுடன்
வாஞ்சையாய்
அழுத்தி அழுத்தி
தலையைத் துவட்டிவிடும்
அப்பாவின் வாசம்
புதுப்பாவாடை
குடை விரிக்க
நமஸ்காரம் செய்தவுடன்
தொட்டு விடாமல்
எட்ட நின்று
காசு கொடுக்கும்
பாட்டியின் ஆச்சாரம்
கருகும்
மஞ்சள் கொத்தின்
மணத்துடன்
பொங்கலோ பொங்கல்
சொன்ன உற்சாகம்
பிடிவாதமாய்
சர்க்கரை
பொங்கலை மட்டும்
தின்று
நிரம்பிய வயிறு
ஆஹா.....
எல்லாம் இனிமையாக
நினைவுகளில்!
ப்ச்
ஏக்கம் நிஜத்தில்!!
Subscribe to:
Posts (Atom)