Monday, February 18, 2013

யுகங்களைக் கடப்போம்!




நினைத்த போது
அடைமழையாய்க்
கொட்டுவதும்
நினைக்காத போது
அழுத்தமாக
அமைதி காப்பதும்
வானத்திற்கும
உனக்கும்
வழக்கம்

கொட்டும்போது

அணுக்கள் தோறும்
குழைவதும்
உன் அமைதியில்
அணுத்துகள்களாய்ச்
சிதறுவதும்
பூமியைப் போன்றே
எனக்கும்
வழக்கம்

இப்படியே

வானமும் பூமியுமாய்

நானும் நீயும்

யுகங்களைக் கடப்போம்!




Sunday, February 17, 2013

ஸ்டிக்கர் பொட்டு



தமிழ்த்தாயே

நாங்கள்

அவசரம் அவசரமாக

அலுவலகம்

கிளம்பும்

வேளையிலும்

பளபளக்கும்

ஸ்டிக்கர் பொட்டை

ஒட்ட மறப்பதில்லை

உன் பட்டு முகத்தில்

ஹைக்கூ கவிதைகளாக!


Saturday, February 9, 2013

நெகிழ்ச்சியான தருணம்




(03/02/13) கலைஞர் நகர் இலக்கிய வட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றதற்காக  திரு. ‘அமுதா’ பாலகிருஷ்ணன் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்திய போது....

அருகில் வாழ்த்திப் பேசிய இலக்கிய வட்டத்தின் பொதுச் செயலாளர் பேரா.முனைவர். ப.கி.பிரபாகரன் அவர்கள்



நெகிழ்வோடு நன்றி கூறிய போது...



வந்திருந்த சான்றோர்கள்

நன்றி இலக்கிய வட்டம்.