இன்று (30/09/18) பாசறை முரசு இதழின் வாசகர் வட்டம் சார்பில் பெரம்பூர் தென்னிந்தியப் பெளத்த சங்கத்தில் பெரியார் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டமாக ‘பெரியாரும் அண்ணாவும்’ என்னும் தலைப்பில் உரையாற்றினேன். எப்போதும் போல இல்லாமல் இது வேறுபட்ட நிகழ்வாக அமைந்தது.
நிகழ்வுக்கு என்னைப் பரிந்துரைத்த பாசறை முரசு இதழின் பொறுப்பாசிரியர் முனைவர் மோ. பாட்டழகன் அவர்களுக்கும் ஆசிரியர் பாசறை மு. பாலன் அவர்களுக்கும் நன்றிகள் பல. இரண்டு மூன்று பேர் பயனாடை அணிவித்து மகிழ்வித்தனர். இளம்பெண்களின் பாராட்டு மகிழ்வாக இருந்தது.






No comments:
Post a Comment