Thursday, April 7, 2016

மீரா விருது வழங்கும் விழாவில்....

பல நிகழ்வுகளில் கலந்து கொள்கிறோம். ஒரு சில நம் மனத்தை விட்டு நீங்கா நினைவாகி மகிழ்வைத் தருகின்றன. மதுரையில் 03.04.16 ஞாயிறு அன்று வளரி இதழும் சூல் வாசிப்புத் தளமும் இணைந்து நடத்திய கவிப்பேராசான் மீரா விருது வழங்கும் நிகழ்வின் அதிர்வு இன்னும் மனத்தை விட்டு நீங்காமல் பசுமையாக உள்ளது. விழாவைச் சிறப்பாக நடத்திய திரு அருணா சுந்தரராசனின் அன்பும் பழகும் நேர்த்தியும் மனத்தில் அவருக்கு ஒரு அழுத்தமான இடத்தைத் தர வைத்து விட்டது.

நிகழ்வில் கவிஞர் மீராவைப் பற்றி நினைவுப் பேருரையாற்றிய பேரா. தி.சு.நடராசன் அவர்கள் விழியோரம் நீரை வர வைத்தார். தலைமையுரையாற்றிய திரு செல்லா அவர்கள் சுருக்கமான உரையாற்றினார். முத்துநிலவன் ஐயா உடபட வாழ்த்துரை வழங்கிய பலரும் உருக்கமாக உரையாற்றினர்.

விழா தொடங்கும் முன்பும் தொடங்கிய பின்பும் ஒவ்வொருவரும் தனித்தனியாக அறிமுகம் செய்து கொண்டு அளவாளாவியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது..

விருதாளர் மு. கீதா, தமிழ்வாசி ( வைரஸ் தாக்குதலில் இருந்து என் முகநூலைக் காக்க வலையில் உதவிய அன்புத் தம்பி), வைகறை, போடி சிவாஜி, அர்ஷியா, சோலைச்சி, இரா. ஜெயா, ராம்போ குமார், ரபீக் ராஜா மற்றும் பல நட்புகளைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக.... (பலரது பெயர்கள் நினைவில் இல்லை. நட்புகள் மன்னிக்கவும்)

அருமையானதொரு நிகழ்வை அமைத்துக் கொடுத்த (விருது வழங்கி சிறப்புரை) அருணா அவர்களுக்கு உள்ளங்கை கொள்ளாத நன்றி மலர்கள்.

எதோ நான்கு புகைப்படங்கள் அனுப்புவார் என்று என் மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் புகைப்படக் கருவியில் பதிவான அத்தனை ஒளிப்படங்களையும் அனுப்பி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திய சாப்லின் ஸ்டுடியோ கோபாலகிருஷ்ணன் ஆழமான நேசிப்புக்குரியவர்.



























1 comment: