Saturday, April 29, 2017

இலக்கியம் எப்போதும் இன்பம்


நேற்று (29.04.17) புதுவையில் நடைபெற்ற புரட்சிக் கவிஞரின் பிறந்தநாள் விழா, டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா மற்றும் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் புதுவைக் கிளை தொடக்க விழா ஆகியவை புதுவைத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
புவைக் கிளையை இலக்கிய வள்ளல் மாம்பலம் ஆ. சந்திரசேகர் திறந்து வைத்தார். எழுத்தாளர்கள் சங்கத்தலைவர் நல்லாசிரியர் கோ.பெரியண்ணன் தலைமையில் செயலாளர் இதயகீதம் இராமானுசம் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார். பொருளார் புலவர் இராமமூர்த்தி, இணைச்செயலாளர் ப.கி.பிரபாகரன், நான், வே. சேகர் ஆகியோர் வாழ்த்திப் பேசினோம். பிறபகல் நிகழ்ச்சியாக கலைமாமணி கோனேரி பா. இராமசாமி தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. அதிலும் கவிதை பாடினோம். நிறைவாகவும் பயணாகவும் இருந்தது.
இலக்கியம் எப்போதும் இன்பம்.


















3 comments:

  1. எமது வாழ்த்துகளும் சகோ...
    - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி. அது என்ன கில்லர்ஜி?

      Delete