Tuesday, March 29, 2011

ஆழியின் அலைகளாய்...

http://images2.layoutsparks.com/1/6927/moonlit-sea-night-view.jpg 

முட்டி மோதி
என் இதயக் கரையை
பலவீனமாக்கி இருக்கிறது
எதற்கும் அஞ்சாத
ஆழியின் அலைகளாய்
உன் நினைவுகள

என்று வரும்
ஆழியின்
அடங்கா குமுறல்
என்று அஞ்சும் கரையோர
மகளாய் நான் இல்லை


இதயச சுனாமி
எழும்நாளை எதிர்நோக்கி
அடியோடு
உன் நினைவு சாகரத்தில்
மூழ்கிவிடத் தயாராக..


கடல வள்ளலாய்
கடையெழு வள்ளலாய்
நித்தமும்
உடல் கூட்டில்
உன் இதழ்சிப்பி பிரசவித்த
நித்திலத்தை
நெஞ்சகத்தில் சுமந்தபடி...

8 comments:

  1. புரியாத கேள்விகளாய் பின்னூட்டம் இடுவதற்கு பதில்... மிகவும் அருமை என்று கூறிவிடுவது மிக நன்று...

    அலைகளாய் தோற்றுவிக்கும் நினைவுகள் அழியாது...

    நினைவுகளை மட்டும் சுகமாக சுமக்க தெரியுந்த இதயம்...

    ஆயுள் முழுதும் அன்பினை சுமக்க முடியாமல் போய்விடுகிறது...வெளிக்காட்ட முடியாமல் போய்விடுகிறது...

    ReplyDelete
  2. //நினைவுகளை மட்டும் சுகமாக சுமக்க தெரிந்த இதயம்...

    ஆயுள் முழுதும் அன்பினை சுமக்க முடியாமல் போய்விடுகிறது...வெளிக்காட்ட முடியாமல் போய்விடுகிறது... //

    உண்மைதான் வாசன் ஆயுள் முழுவது அன்பினைச் சுமக்க முடியாமல் உள்ள அன்பினை வெளிக்காட்ட முடியாமல் போகிறது. அதுவும் அச்சம் காரணமாக இருக்கலாமோ? மீண்டும் நினைவலைகளில் தள்ளாட மனம் இல்லாதாலோ? என்று பல கேள்விக்கணைகளை எழுப்பிய பின்னூட்டம்..
    வரவுக்கு, கருத்துக்கு, அன்புக்கு மிக்க நன்றி வாசன்.

    ReplyDelete
  3. உடனே வந்து கருத்து சொன்னதற்கு மனமார்ந்த நன்றி நாகசுப்ரமணியன்.. தாமதமான் நன்றி உரைத்தலை மன்னிக்கவும்.

    ReplyDelete
  4. அச்சம் எதற்கு? உள்ளத்தின் உள்ளே உள்ள அன்பினை வெளிக்காட்ட... உண்மையான அன்பெனில்.....

    நினைவலைகள் எப்பொழுதும் இதய கடலை விட்டு அகல போவதில்லை...

    ஒருஅலை கரை தொட்டதென மறுஅலை கரையை தொடாமலா போகும்.....

    சுனாமியின் அலை வருமென்று கடற்கரைக்கு செல்லாமல் யாரும் இல்லை...

    அப்படி செல்லாமல் இருந்தல் விழிப்புணர்வு எண்ணம் என்று இல்லை...

    வாழ்க்கையில் ஏதோ இழந்துகொண்டுதான் இருக்கிறோம் என்பது உறுதி...

    மிக்க நன்ற்... உங்கள் மறுமொழிக்கு

    ReplyDelete
  5. இதயச சுனாமி
    எழும்நாளை எதிர்நோக்கி
    அடியோடு
    உன் நினைவு சாகரத்தில்
    மூழ்கிவிடத் தயாராக..

    ஆழியின் அலைகள் அழகு!

    ReplyDelete
  6. Udalai Alla ..Ullaththai Thaakkukinra
    Sunami Ungalathu Varikal..Arumai Akka..Vaazhthukkal.
    http://galleryofpoem.blogspot.com/

    ReplyDelete
  7. கவிதையை இரசித்தேன்
    ---------------------------------
    நந்தினி மருதம், நியூயார்க, 2012-07-03

    ReplyDelete