Saturday, October 27, 2012

மரங்களும் மங்கைகளே





வேதனைகளை
வேர்களாக்கி
மண்ணுக்குள்
மறைத்து விட்டு
மகரந்த மலர்களால்
மணம் விட்டுப்
புன்னகைக்கும்
மரங்களும்
மங்கைகள்தான்

சோதனைகளை
இரத்த நாளங்களாக்கி
இதயப் பைக்குள்
மடக்கி வைத்து
மனம் மரத்து
இதழ் மட்டும்
புன்னகைக்கும்
மங்கைகளும்
மரங்கள்தான்

7 comments:

  1. இதழ் மட்டும்
    புன்னகைக்கும்
    மங்கைகளும்
    மரங்கள்தான்

    nice..

    ReplyDelete
  2. சிறப்பான படம் மற்றும் கவிதை. பாராட்டுகள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வெங்கட்

      Delete
  3. மனதில் இருப்பதை மறைத்து வாழ்வதே மரங்களின் வழக்கமாகி விட்டது :)

    ReplyDelete
  4. அருமையான வரிகள்!

    ReplyDelete