Sunday, January 6, 2013

புதுக்கவளம்


மகிழ்ச்சியும் வருத்தமும் 
பெருமிதமும் நிறைந்த 
நேற்றைய நினைவுகளை 
உறக்கத்தில் செரித்து 
இன்றைய 
புதுக் கவளத்தை 
உண்ணத் தயாராகிறது 
இதயம்.

10 comments:

  1. நடந்ததை மறந்து
    நடப்பதை நினைத்து
    நாள்தோறும்
    நகரும் பொழுதுகள்...

    ReplyDelete
    Replies
    1. அழகிய கவிதைப் பின்னூட்டம். நன்றி மகேந்திரன்

      Delete

  2. நேற்றைய நினைவுகளை உறக்கத்தில் செரிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும். !

    ReplyDelete
    Replies
    1. நினைவுகளை எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் செரித்துக்கொண்டுதான் (ஜீரணித்து) இருக்கின்றது. ஆனால் மறக்கத்தான் முடிவதில்லை.

      Delete
  3. ரசனையான பகிர்வுகள் அருமை

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்டூடன்ஸ் டிராயிங்ஸ்.

      Delete

  4. வணக்கம்!

    பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
    எங்கும் அளிக்கட்டும் ஈந்து!

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாரதிதாசன் அவர்களே. உங்களுக்கும் இனிய தமிழர்த் திருநாள் வாழ்த்துகள்

      Delete