Monday, February 18, 2013

யுகங்களைக் கடப்போம்!




நினைத்த போது
அடைமழையாய்க்
கொட்டுவதும்
நினைக்காத போது
அழுத்தமாக
அமைதி காப்பதும்
வானத்திற்கும
உனக்கும்
வழக்கம்

கொட்டும்போது

அணுக்கள் தோறும்
குழைவதும்
உன் அமைதியில்
அணுத்துகள்களாய்ச்
சிதறுவதும்
பூமியைப் போன்றே
எனக்கும்
வழக்கம்

இப்படியே

வானமும் பூமியுமாய்

நானும் நீயும்

யுகங்களைக் கடப்போம்!




9 comments:

  1. ரசிக்க வைக்கும் வரிகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்

      Delete

  2. யார் வானம் யார் பூமி என்னும் ஐயம் எழுகிறதே./ வானத்திற்கும
    உனக்கும்
    வழக்கம் /பூமியைப் போன்றே
    எனக்கும்
    வழக்கம் / வானமும் பூமியுமாய்

    நானும் நீயும்/






    ReplyDelete
  3. அருமை. அதிலும் யார் வானம் யார் பூமி என்ற twist அழகு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சிவகுமார்

      Delete

  4. ஆதிரா , பானு, ஆதிராமுல்லை பெயர்கள் குழப்புகின்றன. உங்கள் மினனஞ்சல் முகவரி கிடைத்தால் சில சந்தேகங்களைத் தீர்க்கவும் , சில செய்திகளைப் பகிரவும் உதவும். நன்றி.

    ReplyDelete