Sunday, October 22, 2017

கனவு தேவதையைக் கண்டேன்

கனவு தேவதையைக் கண்டேன்
*******************************************
என் நீண்ட நாளைய கனவு தேவதை கவிஞர். இரா. மீனாட்சியைக் காணும் பேறு இன்று கிடைத்தது . கையில் ஒரு பையுடன் அமர்ந்திருந்த அந்தத் தேவதையைக் கண்டவுடன் ஓடிச் சென்று பேசினேன். ஒரு ஐந்து நிமிட உரையாடல்தான். என்னைப் பற்றியும் கேட்டுக் கொண்டது. நான் ஆரோவில்லில்தானே எப்போதும் இருக்கிறேன, வாருங்களேன் என்று அன்பழைப்பும் விடுத்தது.
அந்தத் தேவதை இன்று கன்னிமாரா மத்திய நூலகத்தில் நடைபெற்ற பேராசிரியர் இராம. இராமநாதன் அவர்களின் சிலப்பதிகார ஒலிக் குறுந்தகடு வெளியீட்டு விழாவில் வாழ்த்து உரைக்க வந்திருந்தது. வாழ்த்தையும் அழகு ஒளிரும் கவிதையாக வாசித்தது. தேவதையின் அழகைப் போலவே குரலும் இனிமையாக ஒலித்தது.
நிகழ்ச்சி முடிந்தவுடன் நான் எழுத்தாளர் சங்கத்தின் எட்டையபுரம் பயணத்திற்கான தொகையைப் பெற்றுக்கொண்டு இருந்தேன்.ஒரே ஒரு நிமிடம்தான். ஒருவர் அம்மா கொடுக்கச் சொன்னார் என்று ஒரு பையைக் கொடுத்தார். எந்த அம்மா என்று நான் திரும்பிப் பார்க்கும் போது அந்தத் தேவதையைக் காணவில்லை. மகா கவிதை இதழ்கள் 4 மற்றும் பேராசிரியர்கள் குறிஞ்சி வேந்தன் & அருணன் இருவரும் இணைந்து பதிப்பித்த தேர்ந்தெடுத்த பாடல்களும் R.S.Pillai அவர்களின் ஆங்கில உரையும் அடங்கிய ‘சிலப்பதிகாரம்’ நூல், ஆரோவில் பற்றிய ஒரு துண்டறிக்கை என்று பையோடு கொடுத்து விட்டுச் சிட்டென்று பறந்தது இருந்தது அந்தத் தேவதை. தேடிக்கொண்டிருந்த தேவதையின் காட்சியைக் கண்ணிரண்டில் தேக்கியிருந்த மகிழ்விலும் தேவதையின் கைப்பையே வரமாகப் பெற்ற மகிழ்விலும் குறையேதும் இல்லாமல் திரும்பினேன்.
அருகில் இருப்பவர்கள் ஒலிப்பேழை வெளியிட்ட இராம. இராமநாதன், முனைவர் வாசுகி கண்ணப்பன் மற்றும் செம்மொழி மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் முகிலை. இராசபாண்டியன்



1 comment:

  1. வாழ்த்துகள் எமது...
    - கில்லர்ஜி

    ReplyDelete