Saturday, November 17, 2018

நீதியரசர் ச.மோகன் அவர்களுக்கு பல்துறை வித்தகர் விருது


இன்று (30.10.18) உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் ச.மோகன் அவர்களுக்கு பல்துறை வித்தகர் என்னும் விருதளிப்பு விழா வெற்றிமுனை மாத இதழின் சார்பில் நடைபெற்றது.
இவ்விழாவினை நேர்த்தியாகத் திட்டமிட்டு நடத்திய நீதிபதி மு. புகழேந்தி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
நீதயரசர் ச.மோகன் அவர்களின் ஜூனியரும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசருமான திரு. துரைசாமி ராஜு தலைமை ஏற்றார்.
திராவிடர் கழகத்தின் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விருதினை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் விழா மலரை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார்.
ஸ்பிக் குழுமத்தின் தலைவர் திரு ஏ. சி.முத்தையா அவர்கள் மலரைப் பெற்றுக்கொண்டு வாழ்த்தினார்.
தாகூர் கல்விக் குழுமத்தின் தலைவர் டாக்டர் ராஜா பாதர், சேது பாஸ்கரா கலிவிக் குழுமத்தின் தலைவர் டாக்டர் சேது குமணன், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் திரு மாசிலாமணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
வெற்றிமுனை ஆசிரியரும் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையத்தின் தலைவருமான டாக்டர் மோ. பாட்டழகன் நனறி நவின்றார்.
நான் நிகழ்ச்சி நெறியாளராக......
வழக்கம் போல பாராட்டு மழையில்.......
திரு வீரமணி அவர்கள் நன்றாகப் பேசீனீர்கள் என்று கூறி பொன்னாடை போர்த்தும் போது ஒளிப்படக் கலைஞரை அழைத்து ஒளிப்படம் எடுக்கச் சொன்னார். நீதியரசர் ஏற்புரையின் போது பானுமதி இருக்காங்களே..... ரொம்பக் குறும்புக் காரி. இருக்கறது இல்லாதது எல்லாதையும் சொல்லுவார் என்றார். (அது பாராட்டா?! )
நீதியரசர் துரைசாமி ராஜு, நீதிபதி புகழேந்தி, டாக்டர் ராஜா பாதர், அன்பகம் டாக்டர் வீரமணி, டாக்டர் சேது குமணன் அவர்கள் மேடையில் பெண்களே இல்லை என்று வருந்தினேன். நீங்கள் இருந்தது நிறைவாக இருந்தது என்று கூறி அவரது கல்லூரியின் பேராசிரியர்களிடம் என்னைஅழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்துப் பாராட்டினார். என் மதிப்பிநீற்குரிய நீதியரசர் வள்ளிநாயகம் அவர்கள் உள்ளே நுழையும் போதே உற்சாகமாகப் பாராட்டினார் மூத்த வழக்கறிஞர் காந்தி கீழே இருந்தே சபாஷ் என்று சொல்லி சாடை செய்து பாராட்டினார். டாக்டர் சேயோன் (ஒவொரு முறை நான் பேசும் போது சைகையால் பாராட்டிக் கொண்டே இருந்தார். நிகழ்வு முடிந்ததும் மேடைக்கு வந்தும் பாராட்டினார். என் பேராசிரியர் டாக்டர் ஹேமா சந்தான கிருஷ்ணன் நீதியரசரிடம் என் மாணவி என் மாணவி என்று என்னை கட்டி அணைத்துக் கொண்டு சொன்னார். அன்பு நண்பர் கவிஞர் கோபிநாத் வழக்கம் போல பாராட்டியும் ஒளிப்படங்களை எடுத்தும் கொடுத்தார். நான் அறியாத இன்னும் பலரது பாராட்டு மழையில்.......
குறிப்பு... நன்றி என் நேசத்துக்குரிய கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்களுக்கு. நான் நிகழ்ச்சி நெறி ஆள்கையை ஒத்துக் கொள்வதில்லை என்று சொன்ன போது., அப்படி இல்லை, நல்ல பெரிய நிகழ்வாக இருந்தால் ஒத்துக் கொள்ளுங்கள், உங்கள் குரலும் நீங்கள் நெறிப்படுத்தும் விதமும் அழகாக இருக்கிறது என்று என்னை நெறிப் படுத்தியமைக்காக......






இன்று (30.10.18) உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் ச.மோகன் அவர்களுக்கு பல்துறை வித்தகர் என்னும் விருதளிப்பு விழா வெற்றிமுனை மாத இதழின் சார்பில் நடைபெற்றது.
இவ்விழாவினை நேர்த்தியாகத் திட்டமிட்டு நடத்திய நீதிபதி மு. புகழேந்தி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
நீதயரசர் ச.மோகன் அவர்களின் ஜூனியரும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசருமான திரு. துரைசாமி ராஜு தலைமை ஏற்றார்.
திராவிடர் கழகத்தின் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விருதினை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் விழா மலரை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார்.
ஸ்பிக் குழுமத்தின் தலைவர் திரு ஏ. சி.முத்தையா அவர்கள் மலரைப் பெற்றுக்கொண்டு வாழ்த்தினார்.
தாகூர் கல்விக் குழுமத்தின் தலைவர் டாக்டர் ராஜா பாதர், சேது பாஸ்கரா கலிவிக் குழுமத்தின் தலைவர் டாக்டர் சேது குமணன், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் திரு மாசிலாமணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
வெற்றிமுனை ஆசிரியரும் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையத்தின் தலைவருமான டாக்டர் மோ. பாட்டழகன் நனறி நவின்றார்.
நான் நிகழ்ச்சி நெறியாளராக......
வழக்கம் போல பாராட்டு மழையில்.......
திரு வீரமணி அவர்கள் நன்றாகப் பேசீனீர்கள் என்று கூறி பொன்னாடை போர்த்தும் போது ஒளிப்படக் கலைஞரை அழைத்து ஒளிப்படம் எடுக்கச் சொன்னார். நீதியரசர் ஏற்புரையின் போது பானுமதி இருக்காங்களே..... ரொம்பக் குறும்புக் காரி. இருக்கறது இல்லாதது எல்லாதையும் சொல்லுவார் என்றார். (அது பாராட்டா?! )
நீதியரசர் துரைசாமி ராஜு, நீதிபதி புகழேந்தி, டாக்டர் ராஜா பாதர், அன்பகம் டாக்டர் வீரமணி, டாக்டர் சேது குமணன் அவர்கள் மேடையில் பெண்களே இல்லை என்று வருந்தினேன். நீங்கள் இருந்தது நிறைவாக இருந்தது என்று கூறி அவரது கல்லூரியின் பேராசிரியர்களிடம் என்னைஅழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்துப் பாராட்டினார். என் மதிப்பிநீற்குரிய நீதியரசர் வள்ளிநாயகம் அவர்கள் உள்ளே நுழையும் போதே உற்சாகமாகப் பாராட்டினார் மூத்த வழக்கறிஞர் காந்தி கீழே இருந்தே சபாஷ் என்று சொல்லி சாடை செய்து பாராட்டினார். டாக்டர் சேயோன் (ஒவொரு முறை நான் பேசும் போது சைகையால் பாராட்டிக் கொண்டே இருந்தார். நிகழ்வு முடிந்ததும் மேடைக்கு வந்தும் பாராட்டினார். என் பேராசிரியர் டாக்டர் ஹேமா சந்தான கிருஷ்ணன் நீதியரசரிடம் என் மாணவி என் மாணவி என்று என்னை கட்டி அணைத்துக் கொண்டு சொன்னார். அன்பு நண்பர் கவிஞர் கோபிநாத் வழக்கம் போல பாராட்டியும் ஒளிப்படங்களை எடுத்தும் கொடுத்தார். நான் அறியாத இன்னும் பலரது பாராட்டு மழையில்.......
குறிப்பு... நன்றி என் நேசத்துக்குரிய கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்களுக்கு. நான் நிகழ்ச்சி நெறி ஆள்கையை ஒத்துக் கொள்வதில்லை என்று சொன்ன போது., அப்படி இல்லை, நல்ல பெரிய நிகழ்வாக இருந்தால் ஒத்துக் கொள்ளுங்கள், உங்கள் குரலும் நீங்கள் நெறிப்படுத்தும் விதமும் அழகாக இருக்கிறது என்று என்னை நெறிப் படுத்தியமைக்காக......

No comments:

Post a Comment