Friday, September 17, 2010

வாசனுக்கு ஒரு வாழ்த்துப்பா....



தஞ்சை மகள் ஊரெரித்தாள்
தஞ்சை மகள் ஈன்றெடுத்த் சின்னமகன்
நேசன்நீ உரசும் காதல்எனும் தீப்பந்தம்
தனைக்கொண்டு இனைய ஊர்ப்புரத்தில்
’காதல் கவிஞன் ’ என்ற பேர்பொறித்தாய்!
சொல்லாடல் புரி ஆண் மாதவியாய்!

தஞ்சைக் களஞ்சியத்தின் பொற்குவிநீ
நெஞ்சச் களஞ்சியத்தில் நிறைந்துவிட்ட
நிலவுமுகம் நித்தமும் உதிர்க்கின்ற
உணர்வுகளைச் சொல்லிடவும் மறமில்லை
அள்ளிட என்தமிழுக்கும் திறனில்லை.

உண்டால்தான் மதுமயக்கும் - கண்ணில்
கண்டால்தான் மலர் மயக்கும்
எண்ணிக் கொண்டாலே மயக்குகின்ற கற்கண்டு
சொல்மலையாய் எமைமயக்கி ஆள்கின்றாய்
இயம்பிடத்தான் எழுத்துக்கள் என்வசமில்லை

கருந்திராட்சை கனிக்குலையே
நினைவுமலர் சரம்தொடுப்பாய்
இனிக்கின்ற அன்புரசம் தனையேந்தி
இன்பச்சுவை நிதம்கொடுப்பாய்
இன்சுவையாம் சொல்லாலும் எழுத்தாலும்!

மனிதம் வழிகின்ற மலைத்தேன்நீ
சொல்தென்றல் காற்றதனில் சிதறியஉன்
தேன்மழையில் வற்றல் பாறையிலும்
வசந்தவிழா நடத்துகிறாய் நலமாக!
நீயே தேரேறிப் பவனுகிறாய்!

நேர்த்தியான மனமுண்டு!
வையம் சிறிதாகும்படி புகழை
சேர்த்திடுநீ என்று சொல்லி
வாழ்த்திடவும் வயதுண்டு! என்றாலும்
வணங்குகிறேன் உன்புலமைக்கும்!
வற்றாத அன்புக்கும்!
வளமான பண்புக்கும்!




9 comments:

  1. இத நான் பார்க்கவே இல்லையப்பா. கிளம்பிடாங்கப்பா...
    எனக்கு ஏன்பா இந்த வாழ்த்துப்பா?
    இது என்னப்பா? புது வம்பா...


    மிக்க நன்றி... தங்களின் வாழ்த்துப்பாவிற்குபா....
    மிகவும் அருமையப்பா இது தற்சமயத்திற்குபா...

    விமர்சனம் விரைவில்பா....

    ReplyDelete
  2. வாசன் வடிவில் வரிகள் வார்தளித்த அக்காவின் பாசம் வெல்ல மாளாமல் மனம் வெந்து அழுகிறது
    அருமை அக்கா வாசனே வாழ்க பல்லாண்டு

    ReplyDelete
  3. ஆதிரா அவர்களின் பாவில் இனிமை!
    வாசனின் பதிலில் பாகின் இனிமை!

    ReplyDelete
  4. அழுகின்ற பிள்ளைக்கு பாலை தருவதாய் இல்லாமல்....
    வருத்தம் காட்டிய எனக்கு பாவை படைத்தாய்....
    இரத்தத்தில் ஊறும் பாலை புகட்டுவது போல்
    உள்ளத்தில் உள்ளுறும் பாவை படைத்தாய்....


    இதுவும் இப்போதைக்கு தான்.... விமர்சனமும்.. கருத்தும் தொடரும்...

    ReplyDelete
  5. மிக்க நன்றி தோழர்களே ஹாசிம் & அண்ணாமலை

    ReplyDelete
  6. அன்பு வாசன்,
    உங்கள் முழுமதியான அன்பிற்கு இது ஆயிரத்தில் இல்லை, கோடியில் ஒரு பங்குகூட இல்லை. ஏற்றுக்கொண்டமைக்கு மிக்க நன்றிபா.

    ReplyDelete
  7. அன்பு ஹாசிம்,
    என் உறவுகள் நீங்கள் உட்பட் எல்லோரும் என்னிடம் காட்டும் அன்புக்கு இது ஒன்றும் பெரியதில்லை ஹாசிம். இந்த உறவுகள் என்றும் என்னுடன் வர இறைவனை வேண்டுவதும் இயன்றதைச் செய்வதும் என் கடன் என்று நினைக்கிறேன். தொடரும்..நன்றி ஹாசிம் பார்வையிட்டமைக்கு, பாசத்தால் எனை வென்றமைக்கு..

    ReplyDelete
  8. அன்புள்ள அண்ணாமலை,
    தங்கள் வருகையில் இல்லாத இனிமையா என் பாவில்? தங்கள் வருகையே எமக்கினிமை. மிக்க நன்றி. என்றும் இனிமை. மிக்க நன்றி அண்ணாமலை கவனிப்புக்கு, கருத்துக்கு....இன்னும் தொடரும் அன்பை எதிர் நோக்கி....

    ReplyDelete
  9. எந்தன் முழுமதியான அன்பு என்றும் உங்களை குளிர்விக்கும் என்ற உறுதியுடன், நம்பிக்கையுடன்...

    தங்கள் அன்பினை ஏற்றுக்கொள்ளாமலா?

    ReplyDelete