Wednesday, March 20, 2013

அந்தச் சந்திப்பு


ஒற்றை வருகையில்
என் உள்ளத்தைப் போலவே
நிரம்பி வழிகிறது
என் இல்லமும்
உன் பதிவுகளால்

உன் மெல்லிதழ் சிந்திய
சொல் மகரந்தத்தைக்
அள்ளி எடுத்து
என் மனப்பைக்குள்
நிரப்பி இருக்கிறேன்
சற்றேனும்
சேதம் இல்லாமல்

நாசியை உயிர்த்து
மூச்சை இழுத்து
உன் வாசனையால்
நிரப்புகிறேன்
என் நுறையீரலை

நீ விட்டுச் சென்ற
சுவடுகள்
ஒவ்வொன்றிலும்
இடைவிடாமல்
இட்டு நிரப்புகிறேன்
உயிர்த்தீண்டல்களை!


சேமித்தச் சில்லரைகளை
எவருமறியாமல்
அவ்வப்போது
எண்ணிப்பார்த்துப்
பத்திரப் படுத்தும்
குழந்தையின்
கவனத்துடன
பத்திரப் படுத்தியிருக்கிறேன்
இதயக் கருவூலத்தில்
அந்தச் சந்திப்பை!







No comments:

Post a Comment