Sunday, June 8, 2014

பிரியம்



பிணி
மூப்பு
மரணம்
எதன் பொருட்டோ

இன்றோ
நாளையோ
என்றோ ஒரு நாள்
என் இருப்பு
சூனியமாகலாம்

நாளோ
வாரமோ
மாதமோ
ஆண்டுக்கொரு முறையோ
திறந்திருக்கும் இதயத்திலோ
கனவுகளின் வரத்துக்காக
மூடியிருக்கும் விழிகளிலோ
நான் வரவும் கூடும்
வராமல் போகவும் கூடும்

இப்போதே ஒரு கவிதையை
எழுதி விடுகிறேன்
வழிகின்ற
பிரியத்தின் வண்ணத்தில்
வார்த்தைகளைத் தோய்த்தெடுத்து


8 comments:

  1. அருமை சகோ...

    ReplyDelete
    Replies
    1. ம்ம் மிக்க நன்றி சகோ

      Delete
  2. சிறந்த பாவரிகள்

    visit http://ypvn.0hna.com/

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜீவலிங்கம். வலைத்தளம் பார்த்தேன். என் வ்லைப்பூவையும் இணைத்துள்ளேன்.

      Delete
  3. அடிக்கடி அழவைத்துவிடுகிறீர்களே! நல்ல கவிதை.

    ReplyDelete
    Replies
    1. உண்மையைச் சொன்னேன். என் எழுத்துகள் வழியாக உங்கள் எண்ணத்தில் நிலைத்திருக்கும் பேரவா அது.

      Delete
  4. அருமை..... பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்

      Delete