Tuesday, June 19, 2012

தொலைதூர நண்பன்!




உடைந்து
நொறுங்கும் போதெல்லாம்
அள்ளியெடுக்க
உன்
கரம் வேண்டும்
என்னருகில்!

இமைக்கரை
உடையும் போதெல்லாம்
அணை போட
உன்
சுட்டுவிரல்
வேண்டும்
என்னருகில்!

துவளும் போதெல்லாம்
சுகமாகச்
சாய்ந்து கொள்ள
உன்
உன் தோள் வேண்டும்
என்னருகில்!

என்றாலும்
என்றென்றும்
என்
தொலைதூர
நண்பனாக
நீ வேண்டும்!
 

7 comments:

  1. நன்றி சீனி அவர்களே

    ReplyDelete
  2. நன்றி கவி அழகன்.

    ReplyDelete
  3. வார்த்தை
    கோர்வைகளும்
    சொல்லாக்கமும்
    ம்ம்ம்..... அழகு

    தொலைதூர நண்பன் உணர்தல்

    ReplyDelete
  4. அருமையான கவிதை சகோ.!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வரலாற்றுச் சுவடுகள்

      Delete