Tuesday, August 3, 2010

பிரசவம்..



கொண்டவன் தான்
எட்டாத உயரத்தில்
ஏங்கும் அவள்
மெய்யணைக்கக் 
கதிர்க்கரததை
நீட்டிடுவான்!

குறைவாகச் 
சீதனந்தான்
பெற்றுவிட்ட 
காரணத்தால்
சுட்டெரித்துப் 
பொசுக்கிடுவான்

காமத்தீ மிகுதிபட
சீதளத்து
மண்ணவளோ
நெஞ்சுக்குள்
குமுறிடுவாள்

தரிசாகக் 
கிடந்துழல்வாள்

சில நேரம்
எரிமலையாய் மாறி
இயன்றவரைக்
கொதித்திடுவாள்

காதலவன் 
அகங்குளிர்ந்து
குளிர்க்கரத்தால்
தொட்டணைத்து
அமுதமழை
பொழிந்து விட்டால்
பயிர்ப்பூக்கள்
பிரசவிப்பாள்!


2 comments: