Wednesday, July 25, 2012

இனிய கவிதைக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!



முறைவைத்து முகம் காட்டும் நிலவல்லநீ
என் அறைக்குள்ளும் வந்துநிதம்
அட்சரங்கள் பதித்தாய்
சிறைவைத்தாய் 
முகநுலின் சிட்டுகளை
இதயத்தில்!
உன் உதயத்தால்
சிறகடித்துப் பறக்கின்றோம்!
எழுத்து ஏழை நான்!
வரம்கேட்டேன் வாழ்த்து சொல்ல
வழக்கம்போல்
வார்த்தை வரம் கிட்டவில்லை
மனமலரைப் பறித்தெடுத்து
நினைவுகளால் மணம் கூட்டி
இணையத் தென்றலிலே அனுப்புகிறேன்
ஏற்று அருளும்
இதமான இதயம் அது
என்பதனால்!


இனிய கவிதைக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

எளிமையும் இனிமையும் ததும்பும் பாவலரே எங்களுடன் என்றும் இணைந்து இருக்கும் கருணையும் வேண்டி..... தங்களைப் பல்லாண்டு வாழ்க! என வாழ்த்துகிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பழனி பாரதி சார்.

4 comments:

  1. பல்லாண்டு வாழ வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ராஜபாட்டை ராஜா

      Delete
  2. ada kavithaiyai!

    nanru!

    vaazhthukkal

    ReplyDelete