Monday, July 9, 2012

பிரபஞ்சம் அறியாமல்..





அடை காப்பதில்
உனக்கும் எனக்கும்
எத்தனை வேறுபாடுகள்

ஓட்டுக்குள்
ஜணனித்த
உயிரை
உடல் சூட்டில்
உயிர்ப்பித்து
பிரபஞ்ச வெளியில்
உலவ விட
நீ
அடை காக்கிறாய்!

நானும்
அடைகாக்கிறேன்`

எந்தச் சூட்டிலும்
பொறிந்து விடாத
மரணித்துப் போன
காதலை
பிரபஞ்சம் அறியாமல்
மன மயாணத்துள்
புதைத்து
வைக்க
நான்
அடைகாக்கிறேன்!
 

5 comments:

  1. ean intha veri!


    varuththa veri!

    varuththamaana vari!

    ReplyDelete
    Replies
    1. சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா.... வருத்தப் படாதீங்க சீனி. நன்றி

      Delete
  2. நன்றி வரலாற்று சுவடுகள்

    ReplyDelete
  3. //எந்தச் சூட்டிலும்
    பொறிந்து விடாத
    மரணித்துப் போன
    காதலை
    ......
    நான்
    அடைகாக்கிறேன்! //
    அருமையான வரிகள் .... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. விஜி பார்த்திபன், தங்கள் முதல் வருகை மிக்க மகிழ்ச்சியாக. வருக! வருக! கருத்துக்கு நன்றி.

      Delete