Sunday, July 1, 2012

உறங்காத அந்த விடியல்


வண்ண வண்ணமாக
கண்களில் வந்து போகும
கோல
கலர்க் கனவில்
உறங்காத
அந்த விடியல்

சாணி வாசம்
சுகந்தமாய் வீசும்
குளிர்ச்சியான
மண் தரை

போட்டி போட்டு
பூசனிப் பூவை
சாணியில் நட்டு வைக்கும்
அம்மாவின் கோலம்

குளித்தவுடன்
வாஞ்சையாய்
அழுத்தி அழுத்தி
தலையைத் துவட்டிவிடும்
அப்பாவின்  வாசம்


புதுப்பாவாடை
குடை விரிக்க
நமஸ்காரம் செய்தவுடன்
தொட்டு விடாமல்
எட்ட நின்று
காசு கொடுக்கும்
பாட்டியின் ஆச்சாரம்


கருகும்
மஞ்சள் கொத்தின்
மணத்துடன்
பொங்கலோ பொங்கல்
சொன்ன உற்சாகம்


பிடிவாதமாய்
சர்க்கரை
பொங்கலை மட்டும்
தின்று
நிரம்பிய வயிறு

ஆஹா.....
எல்லாம் இனிமையாக
நினைவுகளில்!
ப்ச்
ஏக்கம் நிஜத்தில்!!



4 comments: