Wednesday, December 22, 2010
Saturday, December 18, 2010
மரபு..
Friday, November 26, 2010
தொடரும் சிறை வாசம்....

காற்றில்லா கூட்டுக்குள்
மெட்டில்லா
மெளனப் பாட்டுக்குச்
சிட்டாக ஆடிவரும்
வெண்ப் பட்டுப்பாவைக்கு
நன்பாட்டு ஒன்றிசைக்க
என்றெவர்தான் வருவாரோ?
*****
அன்பு கறைபட்ட போதும்
துன்பச் சிறை பட்ட போதும்
இன்பம் பிறர்க்கென்று ஓதும்
வேதம் அதுதானே
'பெண்மை'
*****
*****
அன்பு கறைபட்ட போதும்
துன்பச் சிறை பட்ட போதும்
இன்பம் பிறர்க்கென்று ஓதும்
வேதம் அதுதானே
'பெண்மை'
*****
Tuesday, November 16, 2010
ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்!!
உலகெங்கும் வாழும்
என் அன்பிற்கினிய
இசுலாமிய உறவுகளுக்கு
இனிய ஈகைப் பெருநாள்
வாழ்த்துக்கள்!!
Wednesday, November 3, 2010
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..

உலகெங்கும் வாழும்
தமிழர்கள் அனைவருக்கும்,
அகமும் புறமும்
அறிவொளியும்
தீப ஒளியும் பெருகிட
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..



Monday, October 25, 2010
மந்திரம்..

உன்னை உச்சரிப்பதனால்
என் நாவுக்கும்
எழுதுவதால்
என் எழுதுகோல் நாவுக்கும்
ஆனந்தம் அதிகமாவதை
நீ எவ்வாறு அறிவாய்!!
Thursday, October 21, 2010
கல்லல்ல..

சேமிக்க நினைத்த
கனங்களைச் செலவழித்தேன்
தொலைக்க வேண்டிய
தருணங்களை
நினைவுகளாக்கி
நினைவுகளாக்கி
நெஞ்சு கணக்கச்
சேமித்தேன்
சேமித்தேன்
கனங்கள் நழுவி
நாட்களாய்
மாதங்களாய்
வருஷங்களாய் நீள
வருஷங்களாய் நீள
நினைவலைகளில்
கரைந்து கொண்டிருக்கின்றது
ஆயுளும்
நீ கொடுத்த உறுதிமொழிகளும்
மெல்ல மெல்ல!
சுகத்தில் அழுவதும்
சோகத்தில் எழுவதும்
கவிதை எழுத்துக்களுக்கு
மட்டுமே சாத்தியம்!
சிதைந்த கணக்கை
வெட்டுவதும்
சீராக்கி ஒட்டுவதும்
கணிப்பொறிக்கு மட்டுமே
கிட்டிய வரம்!
உடைந்த
இதயச் சில்லுகளைச்
இதயச் சில்லுகளைச்
செதுக்கி வார்ப்பதற்கு
நானும் கல்லல்ல,
நீயும்
கைதேர்ந்த
கணபதி ஸ்தபதி அல்ல!
Wednesday, October 20, 2010
நானும் கல்லல்ல....
சேமிக்க நினைத்த
கனங்களைச் செலவழித்தேன்
நட்டமெனத் தொலைக்க வேண்டிய
தருணங்களை நினைவுகளாக்கி
நெஞ்சு கணக்கச் சேமித்தேன்
கனங்கள் நழுவி
நாட்களாய்
மாதங்களாய் நீள
நினைவலைகளில்
கரைந்து கொண்டிருக்கின்றது
ஆயுள்!
நீ கொடுத்த உறுதிமொழிகளும்
மெல்ல மெல்ல
மூழ்கிக் கொண்டிருக்கிறது
சுகத்தில் அழுவதும்
சோகத்தில் எழுவதும்
கவிதை எழுத்துக்களுக்கு
மட்டுமே சாத்தியம்
சிதைந்த கணக்கை
வெட்டுவதும்
சீராக்கி ஒட்டுவதும்
கணிப்பொறிக்கு மட்டுமே
கிட்டிய வரம்!
உடைந்த சில்லுகளைச்
செதுக்கி வார்ப்பதற்கு
நானும் கல்லல்ல,
நீயும்
கணபதி ஸ்தபதி அல்ல!
Saturday, October 16, 2010
என் இரவு நண்பன்......
இரவு நண்பன் நீ
இனிமைக் கதைகளுக்கும்
இளமைக் கதைகளுக்கும்
கண்ணீரிக் கதைகளுக்கும்
முதலாம் சாட்சி நீ!
ஈருடல் சேரும்
பரவச வேளையில்
இங்கிதம் தெரியா
மனிதர்கள் இவரென்று
முனுமுனுத் திருப்பாயோ?
அங்கத லீலைகள்
அனுதினம் கண்டு
ம்கிழ்ச்சிக் பொங்க
மோன நிலையில்
பூரித்திருப்பாயோ?
மெளன மொழியும்
அறியா உன்னை
மந்திரவாதியாய்
உருவகத்திடும்
அவலம் கண்டு
புழுங்கிச் சாவாயோ?
அழுக்குத் தலையும்
ஈரும் பேணும்
அனுதினம் உன்மேல்
அழுந்துவதனால்
அதிர்ந்து போவாயோ?
அவ்வப்போது மாற்றாவிடினும்
எப்போதாவது சட்டையைமாற்றி
முடை நாற்றத்தின்
மூர்ச்சையில் இருந்து
தெளிய வைப்பார்களா
என்று ஏங்கியிருப்பாயா?
சிவப்பு முக்கோணம்
செய்யும் வேலையைச்
சில நேரங்களில்
செய்வதை எண்ணி
செம்மாந்து இருப்பாயா?
கல்மனக் காரர்கள்
காலுக்குள் போட்டு
மிதிப்பதனாலே
மதிக்கத்தெரியா
மனிதரென்றெண்ணி
மன்னித்திருப்பாயா?
மடியிலுன்னை
சீராட்டுகையிலே
சிந்தனையூற்றாய்
பிராவாகித்து
சீர்கவிதை
பொழிவாயோ?
கட்டில் போரில்
ஆயுதமாகவும்
கேடயமாகவும்
அவதரிப் பதனால்
ஆண்மை கொள்வாயோ?
பஞ்சுப் பொதியே!
எண்ணங்களாகி
பருத்து இருப்பாயோ?
ஓய்வு பெறுமுன்
அனுபவம் கூறி
அமைதி அடைவாயோ?
Tuesday, September 28, 2010
மனைவியின் தகுதி

நினைவுக் கோப்பை
நிறைந்து வழிகிறது
காதல் ரசத்தால்,
ஏடுகளை நீக்கிவிட்டு
பாலைப் பருகிட நினைக்கிறேன்!
நாவிலும் வாழ்விலும்
கசப்பு மட்டுமே மிஞ்சுகிறது!
காத தொலைவு போய்வருவாய்
என்று காத்திருந்த என் கண்களுக்கு
நீ காதலைத் தொலைத்து விட்டு
போனது தெரியாமலே போனது!
விடைகள் சரியாக இருந்தும்
மதிப்பெண் பெறாத விடைத்தாளாய்
காரணம் அறியாமல் பூச்சியமாய்
போனது என் காதல் பரிட்சையும்!
மனைவியாகும்போது
கட்டாயமாகிவிடும்
காதலிக்குத் தேவையில்லாத
தகுதிகளை
தகுதிகளை
உன் மனைவியின்
சீதனக் கணக்கைப் பார்த்து
தெரிந்து கொண்டேன்!
மறுதேர்வு எழுத
காதலிலும் கல்யாணத்திலும்
ஆண்களூக்கு மட்டுமே
அனுமதி உண்டு!
அனுமதி கிடைத்தாலும்
எழுதும் மனநிலையில்
என்றுமே இல்லாத
வறண்ட எழுதுகோலாய்
உலர்ந்த இதயத்துடன்!
Sunday, September 26, 2010
Friday, September 17, 2010
வாசனுக்கு ஒரு வாழ்த்துப்பா....
தஞ்சை மகள் ஊரெரித்தாள்
தஞ்சை மகள் ஈன்றெடுத்த் சின்னமகன்
நேசன்நீ உரசும் காதல்எனும் தீப்பந்தம்
தனைக்கொண்டு இனைய ஊர்ப்புரத்தில்
’காதல் கவிஞன் ’ என்ற பேர்பொறித்தாய்!
சொல்லாடல் புரி ஆண் மாதவியாய்!
சொல்லாடல் புரி ஆண் மாதவியாய்!
தஞ்சைக் களஞ்சியத்தின் பொற்குவிநீ
நெஞ்சச் களஞ்சியத்தில் நிறைந்துவிட்ட
நிலவுமுகம் நித்தமும் உதிர்க்கின்ற
உணர்வுகளைச் சொல்லிடவும் மறமில்லை
அள்ளிட என்தமிழுக்கும் திறனில்லை.
உண்டால்தான் மதுமயக்கும் - கண்ணில்
கண்டால்தான் மலர் மயக்கும்
எண்ணிக் கொண்டாலே மயக்குகின்ற கற்கண்டு
சொல்மலையாய் எமைமயக்கி ஆள்கின்றாய்
இயம்பிடத்தான் எழுத்துக்கள் என்வசமில்லை
கருந்திராட்சை கனிக்குலையே
நினைவுமலர் சரம்தொடுப்பாய்
இனிக்கின்ற அன்புரசம் தனையேந்தி
இன்பச்சுவை நிதம்கொடுப்பாய்
இன்சுவையாம் சொல்லாலும் எழுத்தாலும்!
மனிதம் வழிகின்ற மலைத்தேன்நீ
சொல்தென்றல் காற்றதனில் சிதறியஉன்
தேன்மழையில் வற்றல் பாறையிலும்
வசந்தவிழா நடத்துகிறாய் நலமாக!
நீயே தேரேறிப் பவனுகிறாய்!
நேர்த்தியான மனமுண்டு!
வையம் சிறிதாகும்படி புகழை
சேர்த்திடுநீ என்று சொல்லி
வாழ்த்திடவும் வயதுண்டு! என்றாலும்
வணங்குகிறேன் உன்புலமைக்கும்!
வற்றாத அன்புக்கும்!
வளமான பண்புக்கும்!
வளமான பண்புக்கும்!















Sunday, August 22, 2010
ஐம்பெரும் பிடியில்...மானுடம்
சாதி
சாதியை மதித்து சதிசெயும் அரசியல்வாதியர் சூழ்ச்சியில் நீதியும் மறந்து
மேதினியே சாதியின் பிடியில்! துன்பச்
சேதினை உடைப்பவர் யாரிங்கு சொல்வீர்!
சதியின் குழந்தைகள் சாதிக ளாயின
மதியில் வெல்லவே நீதி தேவையோ
விதியின் வந்ததாய் நின்று வாட்டிடும்
கதியை ஓட்டிட சேர்ந்து வாழுவோம்
மதம்
சக(சா)தியில் சிக்கிய கால்களைக் கழுவிடப்பதமாய் வார்த்தனர் சலுகை நீரதை
மதமெனும் தீயதை மூ(ஊ)ட்டிக் கொலுத்தினர்
குமைந்தது மானுடம் வெந்தது கருகியே
இமயமும் குமரியும் இணைந்தஇப் பாரதம்
சமயங்கள் இணைந்திட வழிசொன்ன நூலகம்
தமயனும் தம்பியும் வேறு மதமெனில்
சுமந்திட்ட ஓர்த்தாய்க் கிழுக்கு அல்லவா?
மொழி
பேசிடும் பேச்சோ உணர்த்திடும் கருவியேபூசியப் பூச்சினால் கண்டது பேதம்
மூ(ச்)சிடும் ஒலியினில் பேதம் உரைத்து
வீசினர் உயிர்களை மொழியெனும் வாளினால்
குழலும் யாழும் ஓசையில் வேறுதான்
துளையில் விழுவது; நரம்பில் எழுவது;
இசையெனும் அமைப்பில் இரண்டும் வேறல
நசையுடன் பேசிட எம்மொழி தாழ்ந்தது?
நாடு
எல்லைகள் இன்றி அன்புப் பயிர்செயதொல்லைகள் தருவதோ நாட்டுப் பற்றது?
நாடு என்பதே ’நடு’வின் தொடக்கமே!
நடுதல் என்பது அன்பை நடுவதே!
நாடுதல் என்றே கொள்ளினும் விரும்புதல்;
தேடுதல் என்றும் சொல்லலாம். எவர்க்கும்
வாடுதல் செய்யும் புன்மை தேடி
கேடுகள் செய்வரோ பகுத்தறி வாளர்?
பணம்
செல்வம் என்பது சிந்தை நிறைவதுபோதும் என்பவன் செல்வன் ஆகிறான்
பேராசை பேயவன் ஏழை ஆகிறான்
பேதம் ஏனிதில்? வாதம் வீணதே!!
கன்று குடித்த பால்மீதம் யாவையும்
நன்று தந்திடும் ஆவின்தன் மைபோல்
நின்று நிலைத்திடா நீசக் காசதை
சென்று சேர்த்திடும் ஏழை வயிறதில்!
ஐம்பெரும் பிடியில்
ஐம்பெரும் பிடியில் அகப்பட்ட மனிதன்ஐயறிவுயிர் போல திரிந்திடும் இழிநிலை
பையவே மாறிட வழியின்றி மேலும்
ஐந்தறிவும் நகும் பகுத்தறி யாநிலை
சொல்லவும் கூடலை சாதியும் சமயமும்
மொழியும் எல்லையும் பணமும் என்ற
ஐம்பிடி இருக்கில் தவித்திடும் மானுடன்
பகுத்தறி யாநிலை மெல்லவும் கூடலை!
.
Friday, August 20, 2010
தூய்மை இழந்த தாய்மை...

குப்பை மேட்டின் இலை பறந்து
கோபுர உச்சி சென்று சேர்ந்ததாம்
கோபுர பொம்மை உடைந்து வீழ்ந்து
குப்பை மேட்டில் குடி புகுந்ததாம்!
தாய்மை என்ற புனிதக் கோபுரம்
சேய்மை மறந்து தூய்மை இழந்தது
காலக் காற்றின் கடின வீச்சதில்
கோலம் மாறிடும் கொடுமை தானிதோ!!
(படம் த்ந்த சரணுக்கு இக்கவிதைப் படையல்..)
..
Sunday, August 15, 2010
“இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்”...
உடன் பிறந்தவர்
மணம் புரிந்தவர்
ஆகும் விந்தையைக்
கண்டனம் என்று
காமுகன் ஒருவனும்
கொடுமன ஒருத்தியும்
நகைமொழி கூறிட
கலங்கிய
காரிகை கண்களும்
கோவலன் நெஞ்சமும்
காவுந்தி என்ற
சாது மிரண்டதும்
அற்ப மனிதர்கள்
நரிகள் ஆனதும்
கதையில் கேட்டனம்
உடன் பிறந்தவர்
ஒரு மனமானதும்
திருமணம் கொண்டதும்
நேரில் கண்டனம்
நெஞ்சு பதைக்கவே
மண்ணின் யாவையும்
மாற்றும் விந்தையர்
பிரம்மன் செயலையும்
திருத்திச் செய்திட
கருவை இணைத்தனர்
செயற்கை முறையினில்
உயிர்கள் இரண்டு அதில்
உருவம் பெற்றன!
ஒட்டிப் பிறந்த
இரட்டைக் குழந்தையை
வெட்டிப் பிரித்தனர்
பணமெனும் கத்தியால்
பெற்ற பாவியும்
விற்ற பாவியும்
வேற்று மண்ணதில்
நட்ட போத்துக்கள்
நட்ட போத்துக்கள்
துளிர் விட்டன
பரிவ ஆசைகள்
தளிர் விட்டன
தளிர் விட்டன
ஒன்றாய்ப் பிறந்த
பாசப்பிணைப்பா
இரண்டற கலக்கும்
நேசப்பிணைப்பா
கள்ளப் பெற்றோரின்
கபடம் அறியாது
கண் கலந்தனர்
காதல் கொண்டனர்
சாதல் வரையிலும்
நல்லறம் பேணும்
இல்லறக் குடிலில்
இனிதே புகுந்தனர்
பெற்ற கணக்கிலும்
விற்ற கணக்கிலும்
புதைந்த உண்மைகள்
புரிந்து விட்டன
உடன் பிறப்பென்ற்
பழங் கணக்கதைப்
புரட்டிப் போட்டன
வழக்குத் தொடர்வதா
புதுமைக் கணக்குடன்
வாழ்வு தொடர்வதா
உயிர் எழுத்துக்கள்
ஒன்றாய் ஆனது
தலையெழுத்து
வேறாய்ப் போனது
“இந்தியர் அனைவரும்
என் உடன் பிறந்தவர்”
உறுதி மொழி
உண்மையானது!!!!
(இக்கவிதை ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் காதலித்து திருமணம் புரிந்து கொண்டுள்ளனர்.. விபரம் அறிந்த பின் என்ன செய்வது என்று அறியாமல் வழக்குத்தொடர்ந்துள்ளனர் என்று நாளிதழில் படித்த செய்திக்கவிதை)
Saturday, August 7, 2010
என் மருத்துவ நண்பன் டாக்டர் வசந்த் செந்திலுக்கு
மருத்துவ நண்பா
உன் இதயத்தில் துவண்ட
ஸ்டெத்தாஸ் கோப்
சங்கத் தமிழரின்
நாடியை அளந்தது
சூட்டளவி
தன் உடல் வெப்பத்தைத்
தணித்துக் கொண்டது
உன் கவிதைக்
குடுவையில் மூழ்கி
உன் கரம் ஏந்திய
சிரஞ்சின் முனை பாய்ச்சிய
கவி சத்தால்
பசலை நோயால்
தளர்ந்து போன
தமிழ்க் கன்னியின்
வெளிர் உடலில்
வசந்த கோலம்
மருந்துச் சீட்டில்
நீ எழுதிய
ஹைக்கூக்கள்
ஹெல்த் டானிக்கானது
அவளுக்கு
உடல் உழுது உள்ளீடான
நோய்களுக்கு நீ செய்த
வெட்டுதலும்
சீர் அழகு கூட்டிவிட
நெகிழியினால்
நீ செய்த ஒட்டுதலும்
வனிதைக்கு மட்டுமல்ல
கவிதைக்கும் அழகுதான்
தமிழாயும் மருத்துவனே
உச்சிமுதல் பாதம் வரை
நோய் நாடி நீ தந்த
ஸ்கேன் ரிப்போர்ட்
அத்தனையும்
கவனமாக நீ எழுதிய
ஆய்வுக் கட்டுரைகள்
எட்ட நின்றே
மூலை முடுக்கெங்கும்
பரவி விட்ட
நோய் தீர்க்கும்
லேசர் மருத்துவமே
நீ நடத்தும்
சுற்றிதழ்கள்
இரத்தம் உரிஞ்சும்
அட்டைப் பூச்சிகளே
கொழுத்துக் கொண்டிருக்கும்
மருத்துவ உலகில்
உலகறிய மருத்துவத்தை
மணம் முடித்து
உளமாறக்
கவித்துவத்தைக் காதலிக்கும்
நீ மட்டும்
தமிழ்ப் புலவன் தருமியானாய்
காத்திருத்தல் கன்னிசுகம்
கூட்டி விடும் அருமருந்து
என்றறிந்த காதல் மருத்துவனே
கட்டி அணைத்திடவும்
செங்கனிவாய் வெள்ளெயிற்றுச்
சாறதனைக் கொட்டிக் கொடுத்திடவும்
உன் பெயரின் வசந்தத்தை
வாழ்வில் ஏற்றிடவும்
கனிந்து விட்டாள்
கவிக் காதலியாள்
இனி உனக்குச் சுகஉலகம்
சொந்தமென்று சாற்றுகிறேன்
வாழ்த்துகிறேன் தோழி நான்!
Thursday, August 5, 2010
நாற்காலி தெய்வம்...

மரம் என்று
சொல்வார்கள் இதனை
சொல்வார்கள் இதனை
பணக்குலைகள் விளைகின்ற
மரமென்ப தாலே!
மரமென்ப தாலே!
தேக்கு என்று
சொல்கின்ற உண்மை!
சொல்கின்ற உண்மை!
இதனுள் பணம் தேக்கும் மர்மங்கள்
மறைந்துள்ளதாலே!
மறைந்துள்ளதாலே!
ஆயிரமாய் அறுவடையை
அள்ளிக் குவிப்பதுதான்
அள்ளிக் குவிப்பதுதான்
அலுவலக ஆசனத்தின்
அரும்பணிகள் என்றால்!
அரும்பணிகள் என்றால்!
அலட்சியமாய் இலட்சத்தை
சாகுபடி செய்வதுதான்
சாகுபடி செய்வதுதான்
அமைச்சரவை நாற்காலிக்
கமைந்திட்ட தொண்டு!
கமைந்திட்ட தொண்டு!
தெய்வம் என்று
போற்றிடுவார் சிலபேர்!
போற்றிடுவார் சிலபேர்!
பணப் படையல்
தனைஇட்டும் இதையடைய
தனைஇட்டும் இதையடைய
விரதங்கள் ஏற்றிடுவர் பலபேர்!
நிலையாக வீற்றிருக்க
உயிர்ப்பலிகள் கொடுத்தும்
பூசனைகள் சாற்றிடுவர்
அரசியலில் உளபேர்!
வெள்ளைநிற ஆடையுடன் அமர்வர்!
கருப்புப் பணம் வைக்கின்ற
இடம் தேடி அலைவர்!
நாற்காலி ஆட்டம்
கண்டு விட்டால்
பணத்தாணி அரைந்து
சரிசெய்யத் துடிப்பர்!
நாற்காலி தெய்வத்தின் காட்சி
பண பக்தியுள்ள பக்தருக்கே
கிட்டும் அருளாட்சி!
.
Tuesday, August 3, 2010
’அந்தத் தருணம்’

ஒட்டிவிடத் துடிக்கும்
காதல் சிதறல்
விரலிடுக்கில்
நம்பிக்கையின்
கடைசி துளியும்
வழியும் நேரம்
வேதனை நெருப்பில்
கொதித்து மேலெழும்
சோற்றுத் திறலாய்
நினைவலைகள்
குருதியைக்
குடிக்க வந்த
குளவியின்
ரீங்காரம்
இனிய
இசையானாது போல
மனதின் குதர்க்கம்
வார்த்தையாய் வழிய
காமத்தேனின்
மரணப்பிடியில்
ஈயென
மூழ்கி இழந்தது
பெண்மை தன்னை
புனிதமென நினைத்த
’அந்தத் தருணம்’
இன்று
புதை குழியாய்!
...
காணாமல் இருந்திருந்தால்....
உன்னைக் காணாமல் இருந்திருந்தால்!!!
இழந்தவைகளின் எண்ணிக்கை
குறைவாக இருந்திருக்கும்
அடைந்தவைகளின் எண்ணிக்கை
வெற்றிடமாக இருந்திருக்கும்!!
..
மங்கையும் மனைவியும்
மங்கை
என்ற காரணத்தால்!
இந்திரனின் உள்ளச்சிறையில்
அகப்பட்டுக்
கல்லான
அகலிகைக்கு
உயிர் தந்து
கடவுளானான்!
மனைவி
என்ற காரணத்தால்
இராவணனின்
இல்லச்சிறையில்
அகப்பட்ட
உயிர்ப்பாவை
மைதிலியை
உயிரோடு எரியூட்ட
கல்லாகினான்.
...
என்ற காரணத்தால்!
இந்திரனின் உள்ளச்சிறையில்
அகப்பட்டுக்
கல்லான
அகலிகைக்கு
உயிர் தந்து
கடவுளானான்!
மனைவி
என்ற காரணத்தால்
இராவணனின்
இல்லச்சிறையில்
அகப்பட்ட
உயிர்ப்பாவை
மைதிலியை
உயிரோடு எரியூட்ட
கல்லாகினான்.
...
பிரசவம்..
கொண்டவன் தான்
எட்டாத உயரத்தில்
ஏங்கும் அவள்
மெய்யணைக்கக்
கதிர்க்கரததை
நீட்டிடுவான்! குறைவாகச்
சீதனந்தான்
பெற்றுவிட்ட
காரணத்தால்
சுட்டெரித்துப்
பொசுக்கிடுவான்
காமத்தீ மிகுதிபட
சீதளத்து
மண்ணவளோ
நெஞ்சுக்குள்
குமுறிடுவாள்
தரிசாகக்
கிடந்துழல்வாள்
சில நேரம்
எரிமலையாய் மாறி
இயன்றவரைக்
கொதித்திடுவாள்
காதலவன்
அகங்குளிர்ந்து
குளிர்க்கரத்தால்
தொட்டணைத்து
அமுதமழை
பொழிந்து விட்டால்
பயிர்ப்பூக்கள்
பிரசவிப்பாள்!
ஒவ்வொரு செல்லிலும்,,,,,,

காதோரம்
குசுகுசுப்பாய!
தொலைவினிலே
நீயிருந்தும
தொடராகப் பேசிடுவாய!
சாமத்தில்
கைப்பேசி இடையிருக்க
சொல் முத்தம் தனை வீசி
சொல் முத்தம் தனை வீசி
திராவிடப்போர்
புரிந்திடுவாய்!
வழிந்து விட்ட
காதல் ரசம்
கதகதப்பைக் கூட்டிவிட
காதல் ரசம்
கதகதப்பைக் கூட்டிவிட
செல்பேசி
நாணத்தால்
முகம் சிவக்கும்!
காணாத
காட்சியெலாம்
கற்பனையில்
கண்டுவிட
செல்
செல்
வெட்கத்தால்
கண்மூடும்!
செல்லுக்குத் தெரியாது
என் ஒவ்வொரு செல்லிலும்
நீயே
நிறைந்து இருப்பது!
நினைவுகளும் சுகம்தான்!!!
நினைவுகளும் சுகம்தான்
நிசத்தில் நீ இல்லாத போது
உன் உடலில் என் வாசம்
என் உயிரில் உன் நேசம்
இதில் என்றும் இல்லை
துளி வேஷம்
உன் சிணுங்களில்
மெய் சிலிர்ப்பேன்
உன்னைச் சீண்டும் போது
மனம் களிப்பேன்
நீ சினம் கொள்ள
முயன்று முயன்று
தோற்ற போது
நானஅழுவேன்
பாதம் முதல்
முன் உச்சிவரை
கடைக் கண்ணால்
பலநேரம் வருடியதும்
எடைப் பார்க்கும்
இயந்திரமாய்
எனைத் தூக்கிச்
சுமந்ததுவும்
இடுப்போரம்
சுலுக்கியதும்
எண்ணிப்பார்த்துச்
சிரித்திடுவேன்
நீ எட்ட நின்றாலும்
உன்னைத்
தொட்டுப் பார்த்துச்
சுகம் கொள்ள
உன் இதழ் பட்ட
இடங்கள் என்னிடமே!!
நினைவுகளும் சுகம்தான்
நிசத்தில் நீ இல்லாத போது
Sunday, June 27, 2010
ஊமை உறவு...

காலை நேரத்தில்
மந்திரி எனக்கு
கருப்புப் பூனையாய்
பின்னால வருகின்றாய்!
மாலை வந்தால்
வாலைக் குலைக்கும்
நாயாய் மாறி
முன்னால் சென்று
வழி காட்டுகின்றாய்!
இடைப்பட்ட நேரத்தில்
தஞ்சை கோயில்
கோபுரம் போல
எனக்குள் மறைகின்றாய்!
அற்ற குளத்து
கொட்டியும் ஆம்பலும்
உனக்குப் பின்தானே!
உண்மை உறவுக்குப்
பொருள்கூறி நிற்கும்
ஊமை உறவே
உன் மறுபெயர்தான்
நிழலோ!!
Subscribe to:
Posts (Atom)