Monday, March 15, 2010

துடிப்பு....


சாதிக்கத் துடிக்கும்
இளைஞனே
உன் கனவுகளைக்
கண்களில் கண்டு விடாதே!!
இமைக்கின்ற நேரத்தில்
உன்னை
ஏமாற்றிக் களவுக்குச்
சென்றுவிடும்
சில நேரம் கமுக்கமாய்
உறங்கி விடும்.

ஓயாது
உறங்காது
உனக்காகவே துடிக்கும்
இதயத்தில் கண்டுவிடு !!


ஆதிரா..

4 comments:

  1. கண்களால் காண்பதை கனவுகளாய்த் தேக்கிவிடு
    எண்களல்ல நிர்ணயிப்பவை உன் எண்ணங்க்ளே...

    கனவுகளை இதயத்தில் காணச்சொல்லும் உன் கான்செப்ட் புதியது ஆதிரா...வாழ்த்துகள் தோழி...!

    கலை

    ReplyDelete
  2. கருத்துக்கும் வாழ்த்துக்கும் கணமான நன்றி தோழா.

    ReplyDelete
  3. துடிப்பான எழுத்துக்கள்,
    புதிய துடிப்பை சொல்கிறது.
    துடிப்புக்கு துடுப்பு தந்த துடிப்பான
    தோழிக்கு வாழ்த்துக்கள்.அருமை உங்கள் துடிப்பு.

    ReplyDelete
  4. மிக்க நன்றி வசீர் அலி.. துடிப்புடன் வந்து நடிப்பில்லாமல் வாழ்த்து சொன்னமைக்கு..தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும் வசீர்..

    ReplyDelete